Kuwait News
Kuwait News/block-2
குவைத்திலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு சென்ற இந்திய இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது
Image : உயிரிழந்த இளைஞர் பிருத்விராஜ்
குவைத்தில் வேலை செய்து வந்த பிருத்விராஜ்(27) என்ற இந்திய இளைஞர் சொந்த ஊரில் நேற்றிரவு நடந்த விபத்தில் மரணமடைந்தார். இவர் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள முண்டூரைச் சேர்ந்தவர் ஆவார். பாலக்காடு கண்ணாடி அடுத்த லுலு மால் அருகே வைத்து நேற்று(02/12/25) செவ்வாய்க்கிழமை இரவு 11:00 மணி அளவில் நடந்த வாகன விபத்தில் சிக்கி கொண்டார்.
குவைத்தில் கடந்த பல வருடங்களாக வேலை செய்து வந்த பிருத்விராஜ், துபாய்க்கு வேலை மாற்றம் கிடைத்ததை தொடர்ந்து, விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில் விபத்தில் சிக்கி கொண்டார். இவருடைய தந்தை ஹரிதாசன் முத்து குவைத்திலுள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். மகனின் மரண செய்தி அறிந்த அவர் இன்று(03/12/25) புதன்கிழமை இரவு ஊருக்கு திரும்புகிறார்.
Indian Worker | Road Accident | Kuwait Worker
சவுதியில் பேருந்தும்-பெட்ரோல் டேங்கர் லாரியும் மோதி தீப்பிடித்த துயரமான விபத்தில் 42 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்த செய்தி வெளியாகியுள்ளது
Image : பேருந்து தீ பிடித்து எரிந்த காட்சிகள்
இந்தியாவின் ஐதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளின் பேருந்தும் பெட்ரோல் ஏற்றி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதி இந்த துயரமான விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து மக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. யாத்திரிகர்கள் மக்காவில் தங்கள் புனித கடன்களை முடித்துவிட்டு மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்தனர். விபத்து நடந்தபோது நள்ளிரவு என்பதால் அனைத்து பயணிகளும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று(17/11/25) அதிகாலையில் சுமார் 1 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டது. பேருந்தில் 43 இந்தியர்கள் இருந்தனர். இதில் முகமது சுஹப்த்(26) என்ற இளைஞர் மட்டும் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். மீதியுள்ள 42 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு வாகனங்களும் மோதிக்கொண்ட அடுத்த நொடியில் பெரிய வெடிகுண்டு வெடித்து சிதறியது போன்று எழுந்த தீ பிழம்பில் சிக்கிய அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும், எங்களால் எந்த மீட்பு நடவடிக்கையும் மேற்கோள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கண்ணிர் மல்க தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கியவர்களில் 20 பெண்கள்,11 குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் 4 பேர், மீதியுள்ளவர்கள் இவர்களுடைய குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் ஆவார்கள். உயிரிழந்தவர்கள் அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்ற கூடுதல் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. 43 பேருமே ஒரு ஏஜென்சி வழியாக இந்தியாவில் இருந்து புனிதப்பயணம் மேற்கொள்ள வந்தவர்கள் ஆவார்கள். விபத்துக்கான காரணம் குறித்த கூடுதல் விபரங்கள் வரும் மணிநேரங்களில் வெளியாகும்.
இதற்கிடையே உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக்க தேவையான வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல்கள் மதினாவில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை, இவர்களை அழைத்து வந்த ஏஜென்சி மற்றும் சவுதி இந்திய தூதரகம் ஆகியவை ஒருங்கிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.
மதீனா பேருந்து விபத்தை தொடர்ந்து குடும்பத்தினரும் உதவ ஜித்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கட்டுபாட்டு அறையினை திறந்துள்ளது. 8002440003 (கட்டணமில்லா),0122614093,0126614276 0556122301(WhatsApp).தெலுங்கானா அரசும் கட்டண அறையினை திறந்துள்ளது +91 7997959754,+91 9912919545.
Indian Visitors | Saudi Accident | Today Accident
குவைத்தில் உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்தது மற்றும் அரசு மானிய விலையில் கிடைக்கும் மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டில் 4 இந்தியர்கள் மற்றும் 4 வங்காளதேச நாட்டவர்கள் உட்பட 8 பேர் கைதாகியுள்ளனர்
Image : அதிகாரிகளிடம் சிக்கிய கும்பல்
குவைத்தில் உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்தது மற்றும் அரசு மானிய விலையில் கிடைக்கும் மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டில் 4 இந்தியர்கள் மற்றும் 4 வங்காளதேச நாட்டவர்கள் உட்பட 8 பேர் கைதாகியுள்ளனர். 4 வங்காளதேச நாட்டவரில் ஒருவர் சுகாதாரத்துறை ஊழியர் ஆவார். Farwaniya பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்தது மற்றும் மருந்துகளை விற்பனை செய்வது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை இரகசிய பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்து இந்த இடத்தை கைப்பற்ற முடிந்தது என்றும், இங்கிருந்து இந்திய நாட்டவரான நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் எனவும், அவர்களில் ஒருவர் உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்து வருவது கண்டறியப்பட்டது, அதே நேரத்தில் மற்ற மூவரும் சிகிச்சை பெறுவதற்காக உரிமம் பெறாத மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வருவதும் கண்டறியப்பட்டது என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரம் பணத்திற்காக அரசாங்க மருந்துகளை சட்டவிரோதமாக எடுத்து வந்து விற்பனை செய்த 3 பேர் அடங்கிய வங்காளதேச நாட்டவரான மற்றொரு கும்பலையும் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணையில் அரசு சுகாதார மையங்களில் ஒன்றில் பணிபுரியும் வங்காளதேச நாட்டவர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து மருந்துகளைத் திருடி விற்பனை செய்வதற்காக தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததையும் அதிகாரிகள் கண்டறிந்து அவரையும் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இந்தியா மற்றும் வங்காளதேச நாட்டினரின் எண்ணிக்கை 8 ஆகியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளை சுகாதார அமைச்சகத்தின் மருந்து கட்டுப்பாட்டுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. நாட்டில் நடைபெறும் சட்டவிரோத மருத்துவ சேவைகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு இயக்குநரக விவகாரத் துறை மற்றும் குற்றவியல் பாதுகாப்பு விவகாரத் துறை இடையேயான கூட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Indian Workers | Kuwait Police | Fake Hospital
நேரம் அதிகாலை 02:37...இந்தியா மாதிரி கிடையாது இந்த ஊர்,துபாய் வாழ் இந்தியப் பெண் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
Image: வீடியோ வெளியிட்ட இந்திய பெண்
பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் இந்த காலகட்டத்தில், ஒரு பெண் இரவில் பயமின்றி சாலையில் தனியாக நடக்க முடியுமா...? இந்திய சூழலில் இது எளிதான காரியம் அல்ல. ஆனால் துபாய் உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு இளம் இந்திய பெண்ணின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அதிகாலை 2.30 மணிக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த வீடியோ, துபாயில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதத்தைத் தொடங்கியுள்ளது. அதிகாலையில் துபாய் நகரத்தின் வழியாக ஒரு இந்தியப் பெண் தனியாக நடந்து செல்லும் வீடியோ இதுவாகும். துபாய் உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகும் என்பதற்கு சான்றாக இந்த வீடியோவை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். இந்த வைரல் வீடியோவில் உள்ள பெண்ணின் த்ரிஷா ராஜ் என்பதாகும்.
அந்த வீடியோவில், த்ரிஷா அதிகாலை 2:30 மணிக்கு துபாய் தெருக்களில் தனியாக நடப்பது எப்படி பாதுகாப்பாக உணர்ந்தேன் என்று பேசுகிறார். வீடியோவில் இப்போது அதிகாலை 2.37 மணி என்றும், சாலையில் தனியாக நடந்து வருவதாகவும் கூறுகிறார். உலகிலேயே துபாயில் மட்டுமே இது சாத்தியம் என்றும், துபாய்க்கு வாருங்கள் என்றும் அந்தப் பெண் வீடியோவில் கூறுகிறார். இங்கு பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் த்ரிஷா கூறுகிறார்.
துபாயில் பெண்களின் பாதுகாப்பை தனது சொந்த நாடான இந்தியாவுடன் ஒப்பிட்டு விளக்குகிறார் த்ரிஷா ராஜ். இந்தியாவில், இதுபோன்ற நேரங்களில் தனியாக வெளியே செல்வது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, ஆண்களின் துணை பொதுவாக தேடவேண்டியது அவசியம். ஆனால் துபாய் இதிலிருந்து வித்தியாசமான சூழ்நிலையைக் காட்டுகிறது என்று அவர் கூறினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் விரைவாக வைரலானது. உலகில் வெவ்வேறு நகரங்களில் உள்ள பாதுகாப்பு குறித்து அந்தந்த நாடுகளில் வசிக்கின்ற பலரும் தங்கள் அனுபவங்களைப் பற்றி பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே துபாயின் பாதுகாப்பைப் பாராட்டி பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
Indian Girl | Dubai Road | Girl Safety
குவைத்தின் மத்திய சிறை வளாகத்தில் இன்று காலையில் அரசு வழக்கறிஞர் மற்றும் சம்மந்தப்பட்ட மற்ற துறைகளின் அதிகாரிகள் முன்னிலையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஏழு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்
Image: குவைத் மத்திய சிறை
குவைத்தின் மத்திய சிறை வளாகத்தில் இன்று காலையில்,அரசு வழக்கறிஞர் மற்றும் சம்மந்தப்பட்ட மற்ற துறையின் அதிகாரிகள் முன்னிலையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஏழு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர். இதில் மூன்று பேர் குவைத் நாட்டினர், இரண்டு பேர் ஈரானியர்கள் மற்றும் இரண்டு பேர் வங்கதேச நாட்டவர் ஆவார்கள். இவர்களில் மூன்று குவைத் நாட்டினர் மற்றும் இரண்டு வங்கதேச நாட்டவர்கள் கொலைக் குற்றவாளிகள் என்றும், இரண்டு ஈரானியர்கள் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் என்றும் குவைத் குற்றவியல் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
கடந்த ஞாயற்றுக்கிழமை எட்டு பேருக்கு இன்று(11/09/25) வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருப்பதாக நமது தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இருப்பினும், குவைத் நாட்டைச் சேர்ந்த ஃபஹத் முகமது என்ற குற்றவாளிக்கு இவரால் கொலை செய்யபட்ட நபரின் உறவினர்கள் மன்னிப்பு வழங்க முடிவு செய்ததை அடுத்து, இன்று காலையில் கடைசி நிமிடத்தில் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேசமயம் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்கு வழங்க தேவையான இரண்டு மில்லியன் குவைத் தினார்கள்(20 லட்சம் தினார்கள்) இரத்தப் பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் சேகரிக்கத் தவறியதைத் தொடர்ந்து அப்துல் அஜீஸ் அல்-அஸ்மி என்ற குவைத் நாட்டவரின் மரண தண்டனையும் இன்று நிறைவேற்றப்பட்டது. குவைத் சட்டம் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
Today Morning | Executed Kuwait | Central Jail
குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் சட்டவிரோதமான விசா விற்பனை ஆட்கடத்தல் தொடர்பான போலி முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது
Image : ஷேக் ஃபஹத் யூசப்
குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் சட்டவிரோதமான விசா விற்பனை மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான செயல்களுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருவதாக அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி இன்று செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசப்பின் உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, உள்துறை அமைச்சகத்தில் உள்ள குடியிருப்பு விவகார புலனாய்வுத்துறை அதிகாரிகள் சிறப்புத் திட்டங்களைத் தயாரித்து வருகிறது. தற்போது, விசா வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களும், இதற்காக போலி உரிமங்களை கைவசம் வைத்திருப்பவர்களும் புலனாய்வுத்துறையின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் கண்டுபிடிக்கப்பட்டு சட்டப்பூர்வமாகக் கையாளப்படுவார்கள் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், யாரும் அநியாயமாக தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றும், இந்த குற்றத்துக்கு பொறுப்பானவர்கள் யாரும் சட்டத்திலிருந்து தப்ப முடியாது என்றும் வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.
விசா வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஸ்பான்சர்கள் மற்றும் முகவர்களைக் கண்டுபிடிக்க அமைச்சகம் இனிமுதல் ஒரு புதிய முறையைப் பின்பற்ற உள்ளது. அதன்படி குடியிருப்புச் சட்டத்தை மீறி வேலை செய்பவர்கள் பிடிபட்டால், விசா வழங்கிய நபர்களின் தகவல்கள் பிடிபட்ட அவர்களிடமிருந்து சேகரிக்கப்படும், பின்னர் முகவர்கள் கண்காணிக்கப்படுவார்கள், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள். இதற்கிடையில், கடந்த ஆண்டு மனித கடத்தல் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது.
சட்டவிரோதமான விசா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10,000 தினார் வரை அபராதமும் விதிக்க சட்டம் வகை செய்கிறது. கடத்தப்பட்ட நபர்கள் மற்றும் விசாக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அபராதம் அதிகரிக்கும். குற்றவாளி அரசு ஊழியராக இருந்தால் தண்டனை இரட்டிப்பாகும் என்றும் சட்டம் கூறுகிறது.
Worker Visa | Indian Workers | Visit Visa
குவைத்தின் மொத்த மக்கள் தொகை 5 மில்லியனை தாண்டியுள்ள நிலையில் இந்திய சமூகத்தினர் தொடந்து முதல் இடத்தில் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன
Image : குவைத் இந்திய தூதரக வளாகம்
குவைத்தின் மக்கள் தொகை 5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சிவில் தகவலுக்கான பொது ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் முதல் பாதியின் இறுதியில் மக்கள் தொகை 5.098 மில்லியனை எட்டியுள்ளது. அதிகாரசபை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர், அதாவது 1.55 மில்லியன் பேர் குடிமக்கள் ஆவார்கள். அதேபோல் நாட்டில் 3.547 மில்லியன் வெளிநாட்டினரும் வேலையின் நிமித்தமாக வசித்து வருகின்றனர்.
இவர்களில் 29 சதவீதம் பேர்,அதாவது 1.036 மில்லியன் பேர் இந்தியர்கள். வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்களே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதற்க்கு அடுத்த படியாக 6,61,318 பேருடன் எகிப்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்டவர்கள், 80 சதவீதம் பேர் 15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் மட்டுமே என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மக்கள் தொகையில் 61 சதவீதம் பேர் ஆண்கள்,மொத்தம் 3.09 மில்லியன் ஆண்கள் மற்றும் 2 மில்லியன் பெண்கள். நாட்டின் தொழிலாளர் துறையில் மொத்தம் 2.283 மில்லியன் மக்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 5,19,989 பேர் அரசுத் துறையிலும், 1.763 மில்லியன் பேர் தனியார் துறையிலும் பணிபுரிகின்றனர். அரசுத்துறையில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுத் தொழிலாளர்களாக எகிப்து நாட்டவர்கள் 7.2 சதவீதம் பேருடன் முதலிடத்திலும், இந்திய தொழிலாளர்கள் 4.51 சதவீதம் பேருடன் இரண்டாது இடத்தில் உள்ளனர். அரசுத் துறையில் உள்ள மொத்த தொழிலாளர்களில் 75.57 சதவீதம் பேரும் குடிமக்கள் ஆவார்கள். தனியார் துறையில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களாக 31.2 சதவீதம் பேருடன் இந்தியர்கள் முதல் இடத்திலும், எகிப்தியர்கள் 24.8 சதவீதம் பேருடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
அதேபோல் வீட்டு வேலைத்துறையில் அதிக எண்ணிக்கையில் 10 தேசிய இனத்தவர்கள் உள்ளனர். நாட்டில் உள்ள மொத்த 8,22,794 வீட்டுப்பணியாளர்களில்,58.2 சதவீதம் பேர் பெண்கள். இந்தத் துறையில் அதிக எண்ணிக்கையிலான இந்தியத் தொழிலாளர்கள் 41.3 சதவீதம் பேர் வேலை செய்கின்றனர். அடுத்ததாக 17.9 சதவீத பிலிப்பைன்ஸ் நாட்டவர்களும் 17.6 சதவீத இலங்கை நாட்டவர்களும் பணிபுரிவதாகவும் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.
Kuwait+Population | Gulf Workers | Indian People
Till now, we were covering news and updates from Kuwait, from now on we are widening our area to all over the GCC. This new modification has been made to covering all GCC news under one domain arabtamildaily.com. We continue to look forward to the support we have received so far from our readers. Also follow us on Linktree
To advertise with us contact on "+919486443352" or drop an email to "editoratdnews@gmail.com"