Kuwait News
Kuwait News/block-2
குவைத்தின் மத்திய சிறை வளாகத்தில் இன்று காலையில் அரசு வழக்கறிஞர் மற்றும் சம்மந்தப்பட்ட மற்ற துறைகளின் அதிகாரிகள் முன்னிலையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஏழு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்
Image: குவைத் மத்திய சிறை
குவைத்தின் மத்திய சிறை வளாகத்தில் இன்று காலையில்,அரசு வழக்கறிஞர் மற்றும் சம்மந்தப்பட்ட மற்ற துறையின் அதிகாரிகள் முன்னிலையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஏழு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர். இதில் மூன்று பேர் குவைத் நாட்டினர், இரண்டு பேர் ஈரானியர்கள் மற்றும் இரண்டு பேர் வங்கதேச நாட்டவர் ஆவார்கள். இவர்களில் மூன்று குவைத் நாட்டினர் மற்றும் இரண்டு வங்கதேச நாட்டவர்கள் கொலைக் குற்றவாளிகள் என்றும், இரண்டு ஈரானியர்கள் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் என்றும் குவைத் குற்றவியல் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
கடந்த ஞாயற்றுக்கிழமை எட்டு பேருக்கு இன்று(11/09/25) வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருப்பதாக நமது தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இருப்பினும், குவைத் நாட்டைச் சேர்ந்த ஃபஹத் முகமது என்ற குற்றவாளிக்கு இவரால் கொலை செய்யபட்ட நபரின் உறவினர்கள் மன்னிப்பு வழங்க முடிவு செய்ததை அடுத்து, இன்று காலையில் கடைசி நிமிடத்தில் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேசமயம் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்கு வழங்க தேவையான இரண்டு மில்லியன் குவைத் தினார்கள்(20 லட்சம் தினார்கள்) இரத்தப் பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் சேகரிக்கத் தவறியதைத் தொடர்ந்து அப்துல் அஜீஸ் அல்-அஸ்மி என்ற குவைத் நாட்டவரின் மரண தண்டனையும் இன்று நிறைவேற்றப்பட்டது. குவைத் சட்டம் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Today Morning | Executed Kuwait | Central Jail
குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் சட்டவிரோதமான விசா விற்பனை ஆட்கடத்தல் தொடர்பான போலி முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது
Image : ஷேக் ஃபஹத் யூசப்
குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் சட்டவிரோதமான விசா விற்பனை மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான செயல்களுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருவதாக அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி இன்று செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசப்பின் உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, உள்துறை அமைச்சகத்தில் உள்ள குடியிருப்பு விவகார புலனாய்வுத்துறை அதிகாரிகள் சிறப்புத் திட்டங்களைத் தயாரித்து வருகிறது. தற்போது, விசா வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களும், இதற்காக போலி உரிமங்களை கைவசம் வைத்திருப்பவர்களும் புலனாய்வுத்துறையின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் கண்டுபிடிக்கப்பட்டு சட்டப்பூர்வமாகக் கையாளப்படுவார்கள் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், யாரும் அநியாயமாக தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றும், இந்த குற்றத்துக்கு பொறுப்பானவர்கள் யாரும் சட்டத்திலிருந்து தப்ப முடியாது என்றும் வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.
விசா வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஸ்பான்சர்கள் மற்றும் முகவர்களைக் கண்டுபிடிக்க அமைச்சகம் இனிமுதல் ஒரு புதிய முறையைப் பின்பற்ற உள்ளது. அதன்படி குடியிருப்புச் சட்டத்தை மீறி வேலை செய்பவர்கள் பிடிபட்டால், விசா வழங்கிய நபர்களின் தகவல்கள் பிடிபட்ட அவர்களிடமிருந்து சேகரிக்கப்படும், பின்னர் முகவர்கள் கண்காணிக்கப்படுவார்கள், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள். இதற்கிடையில், கடந்த ஆண்டு மனித கடத்தல் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது.
சட்டவிரோதமான விசா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10,000 தினார் வரை அபராதமும் விதிக்க சட்டம் வகை செய்கிறது. கடத்தப்பட்ட நபர்கள் மற்றும் விசாக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அபராதம் அதிகரிக்கும். குற்றவாளி அரசு ஊழியராக இருந்தால் தண்டனை இரட்டிப்பாகும் என்றும் சட்டம் கூறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Worker Visa | Indian Workers | Visit Visa
குவைத்தின் மொத்த மக்கள் தொகை 5 மில்லியனை தாண்டியுள்ள நிலையில் இந்திய சமூகத்தினர் தொடந்து முதல் இடத்தில் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன
Image : குவைத் இந்திய தூதரக வளாகம்
குவைத்தின் மக்கள் தொகை 5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சிவில் தகவலுக்கான பொது ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் முதல் பாதியின் இறுதியில் மக்கள் தொகை 5.098 மில்லியனை எட்டியுள்ளது. அதிகாரசபை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர், அதாவது 1.55 மில்லியன் பேர் குடிமக்கள் ஆவார்கள். அதேபோல் நாட்டில் 3.547 மில்லியன் வெளிநாட்டினரும் வேலையின் நிமித்தமாக வசித்து வருகின்றனர்.
இவர்களில் 29 சதவீதம் பேர்,அதாவது 1.036 மில்லியன் பேர் இந்தியர்கள். வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்களே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதற்க்கு அடுத்த படியாக 6,61,318 பேருடன் எகிப்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்டவர்கள், 80 சதவீதம் பேர் 15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் மட்டுமே என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மக்கள் தொகையில் 61 சதவீதம் பேர் ஆண்கள்,மொத்தம் 3.09 மில்லியன் ஆண்கள் மற்றும் 2 மில்லியன் பெண்கள். நாட்டின் தொழிலாளர் துறையில் மொத்தம் 2.283 மில்லியன் மக்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 5,19,989 பேர் அரசுத் துறையிலும், 1.763 மில்லியன் பேர் தனியார் துறையிலும் பணிபுரிகின்றனர். அரசுத்துறையில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுத் தொழிலாளர்களாக எகிப்து நாட்டவர்கள் 7.2 சதவீதம் பேருடன் முதலிடத்திலும், இந்திய தொழிலாளர்கள் 4.51 சதவீதம் பேருடன் இரண்டாது இடத்தில் உள்ளனர். அரசுத் துறையில் உள்ள மொத்த தொழிலாளர்களில் 75.57 சதவீதம் பேரும் குடிமக்கள் ஆவார்கள். தனியார் துறையில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களாக 31.2 சதவீதம் பேருடன் இந்தியர்கள் முதல் இடத்திலும், எகிப்தியர்கள் 24.8 சதவீதம் பேருடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
அதேபோல் வீட்டு வேலைத்துறையில் அதிக எண்ணிக்கையில் 10 தேசிய இனத்தவர்கள் உள்ளனர். நாட்டில் உள்ள மொத்த 8,22,794 வீட்டுப்பணியாளர்களில்,58.2 சதவீதம் பேர் பெண்கள். இந்தத் துறையில் அதிக எண்ணிக்கையிலான இந்தியத் தொழிலாளர்கள் 41.3 சதவீதம் பேர் வேலை செய்கின்றனர். அடுத்ததாக 17.9 சதவீத பிலிப்பைன்ஸ் நாட்டவர்களும் 17.6 சதவீத இலங்கை நாட்டவர்களும் பணிபுரிவதாகவும் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait+Population | Gulf Workers | Indian People
குவைத்தில் 350 தினார் முதல் 1200 தினார் வரை பணம் வசூலித்து விசா விற்பனை மற்றும் ஆட்கடத்தல்களை செய்த இந்தியர்கள் உட்பட்ட கும்பல் கைது
Image : பிடிபட்ட ஆள்கடத்தல் கும்பல்
குவைத்தில் இந்தியர்கள் உட்பட்ட விசா விற்பனை மற்றும் சட்டவிரோதமாக ஆட்கடத்தல்களை செய்த கும்பல் கைது செய்யப்பட்டனர். இந்தக் கும்பலை குவைத்தின் குடிவரவுத்துறையின் குற்றப் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது. 4 நிறுவனங்களைச் சொந்தமாகக் கொண்டவரும் மற்றும் சுமார் 25 நிறுவனங்களில் கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட ஒரு குடிமகனின் பெயரில் விசா விற்பனை மற்றும் கடத்தலை இவர்கள் நடத்தி வந்தனர்.
மேலும் வெளியாகியுள்ள செய்தியில் விசாரணையின் போது நாட்டிற்கு வெளியே இருந்தும் மற்றும் நாட்டிற்க்கு உள்ளேயும் தங்கியிருந்த பல தொழிலாளர்கள் இவர்களுடைய நிறுவனத்தின் கீழ் அவர்களின் விசாக்களை சட்டவிரோதமாக மாற்றி உள்ளதும் கண்டறியப்பட்டது. இந்த கும்பல் வெளிநாட்டிலிருந்து குவைத்திற்கு தொழிலாளர்களை அழைத்து வந்து 350 தினார் முதல் 1200 தினார் வரை பணம் வசூலித்து குவைத்திலுள்ள தங்களுடைய நிறுவனத்திற்கு அவர்களின் விசாக்களை மாற்றினர். இந்த சட்டவிரோதமாக குற்றத்தில் ஒரு குவைத்தி, இடைத்தரகர்களாக இரண்டு இந்தியர்கள், ஒரு சிரியரும் செயல்பட்டனர். குற்ற்றவாளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Worker Visa | Indian Workers | Visit Visa
குவைத் விமான நிலையம் வழியாக பெரும் அளவிலான புகையிலை பொருட்களை கடத்த முயன்ற 4 வங்காளதேச பயணிகள் நேற்றும் இன்றுமாக பிடிபட்டதாக சுங்கத்துறை இன்று மதியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது
Image : பிடிபட்ட புகையிலை பொருட்கள்
குவைத் விமான நிலையத்தில் போதைப்பொருளை தடுப்பதற்கான சோதனைகளை தொடந்து நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட பொருட்களின் கடத்தலைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, விமான நிலையத்தின் முனையம் 4 (T4) யின் வழியாக நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்த பயணிகளிடம் இருந்து அதிக அளவு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள்(மெல்லும் புகையிலை) பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
இரண்டு தனிதனியான சம்பவங்களில், மெல்லும் புகையிலையை நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக நான்கு வங்காளதேச பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். நேற்று ஒரு பயணியிடமிருந்து 41 கிலோகிராம் மெல்லும் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்த நாளான இன்று மற்ற மூன்று வங்காளதேச பயணிகளிடமிருந்து 159 கிலோகிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம், பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த அளவு 200 கிலோகிராமை எட்டியுள்ளது.
இதை தொடர்ந்து விமான நிலைய சுங்கத்துறை உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து,பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான அறிக்கைகளை தயார் செய்து, கைது செய்யப்பட்ட நபர்களை சம்பந்தப்பட்ட குற்றப்பிரிவு அதிகாரியிடம் ஒப்படைத்தது. இந்த வழக்கில் குவைத்திற்குள் இந்த புகையிலை பொருட்களை கடத்தி வருவதற்கு உதவி மற்றும் இவற்றை விமான நிலையத்தில் இருந்து பெற்று செல்ல காத்திருந்த மற்ற நபர்களைக் கண்டறிய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து பிடிபட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Airport | Customs Checking | Tobacco Seizure
குவைத் விமான நிலையம் வழியாக பயணிக்கும் போது பணம் தங்கம் விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் போன்றவை கைவசம் இருந்தால் சுங்க அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்
Image : குவைத் விமான நிலைய சோதனை பகுதி
குவைத் சர்வதேச விமான நிலையம் வழியாக 3,000 தினார் அல்லது அதற்கு மேல் பணத்தை எடுத்துச் செல்லும் பயணிகளும், அதேபோல் தங்கம்(அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக), விலையுயர்ந்த கடிகாரங்கள், மின்னணு சாதனங்கள் போன்றவை கைவசம் இருந்தாலும் அவற்றை சுங்க அறிவிப்பு படிவத்தை(self declaration form) பூர்த்தி செய்வது கட்டாயம் என்று சுங்கத்துறை பொது நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேபோல் கை பையில் விலையுயர்ந்த சாமான்களை எடுத்துச் செல்லும் போது அந்த பொருட்களுக்கான விலைப்பட்டியல் மற்றும் உரிமை ஆவணங்களையும் சம்மந்தப்பட்ட பயணி கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. சுங்கத்துறைக்கு தெரிவிக்காமல் மேற்குறிப்பிட்ட பொருட்களை கொண்டு பயணம் செய்வது சட்ட மீறலாகக் கருதப்படும். இதுபோன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
நாட்டிற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் பயணிகள் சுங்கப் படிவத்தை நிரப்ப வேண்டும் என்றும், இது பாதுகாப்பு மற்றும் உலகளாவிய தரநிலைகளை உறுதி செய்வதற்கான ஒரு நடவடிக்கை என்றும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் தகவலுக்கு, சுங்கத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேல் குறிப்பிட்ட நடைமுறை குவைத் கடல் எல்லை வழியாகவோ அல்லது சாலை வழியாகவோ நாட்டின் எல்லை தாண்டி செல்லும் போதும் பொருந்தும் என்பதும் குறிப்பிடதக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Airport | Customs Checking | Self Declaration
குவைத்தில் இருந்து இயங்கும் இந்திய விமானங்களின் வாராந்திர இருக்கைகளின் எண்ணிக்கை 12,000-லிருந்து 18,000-ஆக அதிகரிப்பதால் பயணச்சீட்டு கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Image : பதிவுக்காக பதிவிறக்கம் செய்யப்பட்டது
இந்தியாவிற்கும்-குவைத்திற்கும் இடையே கடந்த வாரம் கையெழுத்தான புதிய விமான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியாவை தலைமையிடமாக கொண்ட பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்கள் அதன் வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்த முயற்சிகளைத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக விமான நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டு நெட்வொர்க்குகளை மறுசீரமைத்து வருவதாகக் கூறப்படுகிறது. புதிய விமான ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வாரந்திர இருக்கைகளின் எண்ணிக்கை 6,000 அதிகரித்துள்ளது.
தற்போது இண்டிகோ, ஏர் இந்தியா, ஆகாஷ் ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய இந்திய விமான நிறுவனங்கள் ஆகஸ்ட் 2025 முதல் குவைத்துக்கு புதியதாக கூடுதல் விமானங்களின் சேவை தொடங்கவும், ஏற்கனவே உள்ள சேவைகளை விரிவுபடுத்தவும் திட்டங்களைத் தயாரித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு விமான நிறுவனமும் தேவையான இடங்களை(ஸ்லாட்) பெற குவைத் சர்வதேச விமான நிலையத்துடன் தீவிரமான பேச்சு வார்த்தைகள் மூலம் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இண்டிகோ ஏர்லைன்ஸ் குவைத்துக்கு வாரத்திற்கு கூடுதலாக 5,000 இருக்கைகளை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்கிடையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஆகாஷ் ஏர் சுமார் 3,000 இருக்கைகளைக் கோரியுள்ளதாகவும், ஏர் இந்தியா 1,500 இருக்கைகளைக் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னை, திருவனந்தபுரம், கொச்சி மற்றும் பெங்களூர் போன்ற பயணிகள் அதிகமாக பயணம் செய்கின்ற நகரங்களிலிருந்து புதிய விமானங்கள் தொடங்கப்பட வாய்ப்புள்ளது.
ஜூலை 21 ஆம் தேதிக்குள் திறன் விரிவாக்கத்திற்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு குவைத் மற்றும் இந்திய விமான நிறுவனங்களை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(DGCA) கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கும் குவைத்துக்கும் இடையே ஜூலை 16-ஆம் தேதி புதிய விமான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் கீழ், வாராந்திர இருக்கைகளின் ஒதுக்கீடு 12,000-லிருந்து 18,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் இரு நாடுகளும் இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது இதுவே முதல் முறையாகும்.
இதன் மூலம் தமிழர்கள் அதிகமாக பயணம் செய்கின்ற தமிழக-கேரளா எல்லையான திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளின் பயணச்சீட்டு கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளாவின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பயணம் செய்வதால் இந்தியாவின் எந்த விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணச்சீட்டு கட்டணத்தை விட திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வழியாக பயணிக்க பயணச்சீட்டு கட்டணம் எப்போதும் ஒருபடி அதிகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Airport | Indian Airport | Flight Tickets
Till now, we were covering news and updates from Kuwait, from now on we are widening our area to all over the GCC. This new modification has been made to covering all GCC news under one domain arabtamildaily.com. We continue to look forward to the support we have received so far from our readers. Also follow us on Linktree
To advertise with us contact on "+919486443352" or drop an email to "editoratdnews@gmail.com"