BREAKING NEWS
latest

Featured - Arab Tamil Daily - The 24×7 Gulf News

Latest Featured News, Articles, Featured Images, Videos, Full-Time GCC Arabic News in Tamil, Film, Entertainment, Politics, and Sports Updates from Arab Tamil Daily.

Monday, March 24, 2025

குவைத்தின் முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் காலித் அல்-ஜரல்லா காலமானார்

குவைத்தின் சிறந்த அதிகாரியும் இந்திய சமூகத்தினருடன் நெருக்கம் பேணிவந்த நபருமான காலித் அல்-ஜரல்லா காலமானார்

Image : காலித் அல்-ஜரல்லா அவர்கள்

குவைத்தின் முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் காலித் அல்-ஜரல்லா காலமானார்

குவைத்தின் சிறந்த அதிகாரியும் மற்றும் முன்னாள் வெளியுறவு இணை அமைச்சருமான காலித் அல்-ஜரல்லா(வயது-78) அவர்கள் இரவு காலமானார். அவர் 1971 ஆம் ஆண்டு குவைத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பட்டம் பெற்ற பிறகு, அதே ஆண்டில் வெளியுறவு அமைச்சகத்தில் வேலைக்காக சேர்ந்தார். பின்னர் அவர் பல்வேறு வெளியுறவுத்துறை பதவிகளை வகித்ததை தொடந்து, 1999 இல் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அமைச்சர் ஆவதற்கு முன்னதாக 1972 முதல் 1974 வரை லெபனானுக்கான குவைத்தின் தூதராகவும் அவர் பணியாற்றினார். பின்னர் குவைத்துக்குத் திரும்பிய பிறகு, வெளியுறவு அமைச்சகத்தில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றினார். அவர் 1974 முதல் 1987 வரை அரபு விவகாரப் பிரிவின் தலைவராக பதவி வகித்தார். 1987 ஆம் ஆண்டில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் விவகாரங்களுக்கான துறையின் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

1999 ஆம் ஆண்டு வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஜனவரி 2021 இறுதியில் அமைச்சர் பதவியில் இருந்து தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார். குவைத்தில் உள்ள இந்திய சமூகத்துடனும், இந்திய தூதரகத்துடனும் அவர் நெருங்கிய உறவுகளைப் பேணி வந்த சிறந்த நபர் என்பது அமைப்புகளில் இயங்கி வருகின்ற இந்தியர்களுக்கு நன்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Foreign Minister | Indian Community | Kuwait Minister

Add your comments to Featured

Sunday, March 23, 2025

குவைத்தில் 9 நாட்கள் ஈத் விடுமுறை என்ற கனவுக்கு டிஸ்ட் வைத்து சிவில் சர்வீஸ் கமிஷனின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

ஈத் தொடர் விடுமுறை 9 நாட்கள் கிடைக்குமா அல்லது 5 நாட்களாக சுருங்குமா என்பது பிறை தென்படும் தேதியை பொறுத்து இந்த வருடம் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது

Image : குவைத் சிட்டி டவர்

குவைத்தில் 9 நாட்கள் ஈத் விடுமுறை என்ற கனவுக்கு டிஸ்ட் வைத்து சிவில் சர்வீஸ் கமிஷனின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

குவைத்தில் இந்த ஆண்டு ஈத் பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுப்பு எடுக்க முடியும் என்ற கனவில் இருந்த அரசு ஊழியர்களுக்கு சிவில் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு பேரிடியை கொடுத்துள்ளது. நாட்டில் இந்த ஆண்டிற்கான ஈத் விடுமுறை மார்ச்-30,2025 ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்குகிறது. ஆனால் மார்ச்-29,2025 சனிக்கிழமை மாலையில் பிறை தெரிவதன் அடிப்படையில் மட்டுமே ஈத் விடுமுறை எப்போது முடிவடைகிறது என்பதை அறிய முடியும். மார்ச்-29,2025 சனிக்கிழமை மாலையில் பிறை தென்பட்டால் மார்ச் 28 மற்றும் 29 வார விடுமுறை நாட்களைத் தவிர, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் வரையிலான 3 நாட்கள் ஈத் விடுமுறை உட்பட தொடர்ந்து 5 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கும். இதை தொடந்து ஏப்ரல்-2,2025 புதன்கிழமை முதல் வேலை நாள் தொடங்கும்.

ஆனால் மார்ச்-29,2025 அன்று பிறை தென்படாத சூழ்நிலை ஏற்பட்டால் மார்ச்-30,2025 ஞாயிற்றுக்கிழமை முதல் ஏப்ரல்-3,2025 வியாழன் வரை தொடர்ந்து 5 நாட்கள் வரை பொது விடுமுறையும், விடுமுறை தொடங்குவதற்கும் முன்னரும்-பின்னரும் உள்ள 4 நாட்கள் வார விடுமுறை உட்பட 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும், இதையடுத்து ஏப்ரல் 6 ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் வேலை நாள் தொடங்கும். இதில் டிஸ்ட் எங்கே என்று தானே கேட்கிறீங்க....??? மீதியை படியுங்கள் புரியும்......

அதாவது ஏப்ரல் 2 வேலை நாளா இல்லையா என்பதை அறிய ஊழியர்கள் மார்ச் 29 சனிக்கிழமை வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் சிவில் சர்வீஸ் கமிஷன் தற்போது வெளியிட்ட அறிவிப்பின்படி ஏப்ரல் 2, 3(புதன் மற்றும் வியாழன்) தேதிகளில் விடுப்பு எடுப்பவர்கள் வருகின்ற மார்ச்-27 வியாழக்கிழமைக்குள் விடுப்புக்கான விண்ணப்பங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்பு விடுப்பு விண்ணப்பம் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மருத்துவ விடுப்பு, அவசரகால விடுப்பு போன்றவற்றை பயன்படுத்தி விடுமுறை எடுத்து நழுவும் நபர்களுக்கு சிவில் சர்வீஸ் கமிஷன் கட்டுபாடு விதித்துள்ளது. இந்த நாட்களில் மருத்துவ விடுப்பு மருத்துவரின் அனுமதியுடன் மட்டுமே பெற முடியும் என்று கமிஷன் தடை விதித்துள்ளது.

அதேபோல் அவசரகால விடுப்பு ஒரு நாள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு அவசர விடுமுறை அனுமதிக்கப்படாது என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. அனுமதியின்றி இந்த நாட்களில் பணிக்கு வராத ஊழியர்களின் வருடாந்திர செயல்திறன் அறிக்கையில் இந்த விடுமுறை பதிவு செய்யப்படும் என்றும், இந்த நாட்கள் வருடாந்திர விடுப்பில் இருந்து கழிக்கப்படும் எனறும் அறிவிக்கையில் எச்சரித்துள்ளது. எங்களுக்கு கிடைக்காத 9 நாட்கள் தொடர் விடுமுறை உங்களுக்கு மட்டும் எதுக்குடா....??? என்ற தனியார் கம்பெனி ஊழியர்கள், வீட்டு பணியாளர்கள் மற்றும் கடைகளில் வேலை செய்கின்ற ஊழியர்களின் குமுறல் சத்தம் சிவில் சர்வீஸ் கமிஷனுக்கு கேட்டிருக்குமோ.....????

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Official Holiday | Eid Holidays | Kuwait Csc

Add your comments to Featured

குவைத்தில் வண்டி ஏற்றி தொழிலாளியை கொடுரமாக கொலை செய்த வழக்கில் குவைத் குடிமகன் சிக்கியுள்ளான்

குவைத் காவல்துறை அதிரடி நடவடிக்கையின் விளைவாக கடந்த வாரம் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தொழிலாளியை கொலை செய்த குடிமகன் கைது செய்யப்பட்டார்

Image: தொழிலாளி வண்டி ஏற்றி கொலை செய்யபட்ட இடம்

குவைத்தில் வண்டி ஏற்றி தொழிலாளியை கொடுரமாக கொலை செய்த வழக்கில் குவைத் குடிமகன் சிக்கியுள்ளான்

குவைத்தின் முட்லா பகுதியில் மொபைல் பக்காலாவில் இருந்து பொருட்களை வாங்கிவிட்டு பின்னர் பணம் செலுத்தாமல் வாகனத்தில் கடக்க முற்பட்டபோது தடுக்க முயன்ற வெளிநாட்டு ஊழியர் வாகனம் மோதி உயிரிழந்த வழக்கில் குவைத் குடிமகன் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் இது தொடர்பான செய்தி கடந்த வாரம் நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம் வாசகர் பல படித்திருப்பீர்கள்.

நாட்டின் குற்றப் பாதுகாப்புத் துறையின் துணைச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஹமீத் அல்-தவாஸ் அவர்கள் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை நடத்தி விசாரணையில், ஒரே வாரத்தில் குற்றவாளி பிடிபட்டார். குற்றவாளி குவைத் குடிமகன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவர் பக்கலாவை(கடைகளை) குறிவைத்து கடந்த காலங்களில் இது போன்ற பல குற்றங்களைச் செய்திருப்பதும் விசாரணை யில் கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த குற்ற சம்பவங்களில் எதுவிலும் ஊழியர்களுக்கு உயிரிழப்புகள் ஏற்படுத்தவில்லை. பலருக்கும் காயத்தை இவர் ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இம்மாதம் 14-ஆம் தேதி ஜஹ்ரா கவர்னரேட்டின் அல்-முட்லா பகுதியில் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளி, உயிரிழந்த தொழிலாளி வேலை செய்யும் மொபைல் பக்காலாவுக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் வாகனத்தில் ஏறிச் செல்ல முயன்றார். இதையடுத்து கடையின் ஊழியர் குற்றவாளியை தடுத்து நிறுத்த வாகனத்தில் தொங்கிக் கொண்டிருந்தார்.

ஆனால் குற்றவாளி வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்றதால் ஊழியர் வாகனத்தின் நடுவில் சிக்கிக் கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு ஜஹாரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது தொடர்பான கூடுதல் விபரங்களும் தெரியவில்லை.

இதையடுத்து குற்றவாளி சில்வர் நிற நான்கு சக்கர வாகனத்தில் பக்காலாவில் சென்றது சிசிடிவி காட்சிகளில் இருந்து தெளிவானது. நேரில் கண்ட சாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவரின் வாகனம் 15 கொள்ளை வழக்குகளில் தொடர்புடையது என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து குற்றவாளியை கைது செய்ய தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் சுலைபியா பகுதியில் இதேபோன்ற மற்றொரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மற்றொரு வெளிநாட்டு ஊழியர் ஜஹாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறி்ப்பிடத்தக்கது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளி இதுவரை செய்த குற்றங்கள் தொடர்பாக தொடந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Police | Kuwaity Man | Shop Worker

Add your comments to Featured

குவைத்தில் வெளிநாட்டினர் ஓட்டுநர் உரிமத்தின் காலாவதி 5 வருடங்கள் என்பது உள்ளிட்ட திருத்தப்பட்ட புதிய போக்குவரத்து சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது

குவைத்தில் வெளிநாட்டினர் ஓட்டுநர் உரிமத்தின் காலாவதி இனிமுதல் 5 வருடங்களாக இருக்கும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

Image : குவைத் ஓட்டுநர் உரிமத்தின் மாதிரி புகைப்படம்

குவைத்தில் வெளிநாட்டினர் ஓட்டுநர் உரிமத்தின் காலாவதி 5 வருடங்கள் என்பது உள்ளிட்ட திருத்தப்பட்ட புதிய போக்குவரத்து சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது

குவைத்தில் வசிக்கின்ற வெளிநாட்டினருக்கான ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும்(காலாவதி) காலம் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டின் போக்குவரத்துச் சட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட விதிமுறைகள் 425/2025 மற்றும் 76/1981 இன் கீழ் உள்ள பிரிவுகளில் செய்யப்பட்ட மாற்றங்களின்படி இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குவைத் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டு திருத்தப்பட்ட புதிய சட்டம் இன்று(23/03/25) ஞாயிறுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

புதிய சட்டத்தின்படி பல்வேறு வகையான ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும்(காலாவதி) காலம் மற்றும் பயன்பாட்டு வரம்புகள் மாறும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் புதிய சட்டப்படி 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் நடைமுறையில் இருந்து வருகின்ற சட்டப்படி ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவரின் குடியிருப்பு அனுமதியின்(விசா காலவதியை) கால அளவை அடிப்படையாகக் கொண்டு வெளிநாட்டினருக்கு இவை புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்த சட்டமே தற்போது ரத்து செய்யப்பட்டு 5 வருடங்களாக காலவதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ், குடிமக்களுக்கு 15 ஆண்டுகளும், குடிமக்கள் அல்லாதவர்களுக்கு(பிதூனி) தங்களுடைய அடையாள அட்டையின் காலாவதி அடிப்படையிலும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் செய்யப்படும். மேலும் தற்போது ஓட்டுநர் உரிமம் கைவசம் உள்ள வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமங்கள் காலாவதியாகும் போது புதிய சட்டத்தின்படி 5 ஆண்டுகளுக்கு ஓட்டுனர் உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு வழங்கப்படும் என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait License | Indian Worker

Add your comments to Featured