BREAKING NEWS
latest

Kuwait News

Kuwait News/block-2

UAE News

Uae News/block-5

Saudi News

Saudi News/block-5

Oman News

Oman News/block-4

Qatar News

Qatar News/block-3

Bahrain News

Bahrain News/block-2

Srilanka News

Srilanka News/block-3

Tamil Nadu News

Tamil Nadu News/block-1

Latest Articles

Monday, August 10, 2026

அரபு தமிழ் டெய்லி தளத்தின் நிறுவனர் யார்..?

Who is the founder of the Arab Tamil Daily website?

Image : சாஜன் ராமச்சந்திரன

அரபு தமிழ் டெய்லி தளத்தின் நிறுவனர் யார்..?

அரபு தமிழ் டெய்லி தளத்தின் நிறுவனர் சாஜன் ராமசந்திரன் என்பவர் ஆவார். இவர் கன்னியாகுமரியை பூர்வீகமாக கொண்டவர். இவர் தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் புலமை கொண்டவர். இந்த செய்தி தளம் 2012 கடைசியில் துவங்கப்பட்டன. தற்போது சுமார் 5,00,000 தமிழர்கள் பின் தொடரும் வளைகுடாவின் தமிழ் செய்தி தளங்களில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sajan Ramachandran | Tamil News | Atd News

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

Monday, July 27, 2026

குவைத்தில் கொடூரமாக தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குடிமகனுக்கு 15 ஆண்டு சிறை;வெளிநாட்டினருக்கு நீதி மறுக்கப்படுகிறதா....???

குவைத்தில் 2 தினாருக்காக கொடூரமாக தொழிலாளி மீது வண்டியை ஏற்றி கொலை செய்த வழக்கில் குடிமகனுக்கு 15 ஆண்டுகள் சிறை என்ற தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது

Image : செய்திக்காக பதிவிறக்கம் செய்யப்பட்டது

குவைத்தில் கொடூரமாக தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குடிமகனுக்கு 15 ஆண்டு சிறை;வெளிநாட்டினருக்கு நீதி மறுக்கப்படுகிறதா....???

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளியின் மரணத்திற்கு காரணமான குவைத் குடிமகன் ஒருவருக்கு குற்றவியல் நீதிமன்றம் விதித்த 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை இன்று(27/07/26) மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நீதிபதி நாசர் சலீம் அல்-ஹைத் தலைமையில், நீதிபதிகள் முதாப் அல்-அரிதி மற்றும் சவுத் அல்-சானி ஆகியோரைக் கொண்ட அமர்வு குற்றவியல் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இரவு நேரத்தில் அல்-முத்லா பகுதியில் இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்தது. அந்த நேரத்தில் இது தொடர்பான செய்தியை நமது தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

சம்பவம் நடந்த அன்று, குற்றவாளி அப்பகுதியில் உள்ள மொபைல் மளிகைக் கடைக்கு வாகனத்தில் வந்து, 2 தினார் மதிப்புள்ள பொருட்களை வாங்கிவிட்டு, பணம் செலுத்தாமல் வாகனத்தை ஓட்டிச் செல்ல முயன்றார். இருப்பினும் தப்பித்த வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற ஊழியரின் கையை கண்ணாடி ஜன்னலை மூடி, சுமார் 30 மீட்டர் தூரம் வாகனத்தில் இழுத்து சென்று பின்னர் ஜனலை திறந்தான் இதில் தூக்கி வீசப்பட்ட அவருடைய உடலில் பின்சக்கரம் ஏறி இறங்கியதால் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. பின்னர் கவலைக்கிடமாக இருந்த ஊழியரை ஜஹ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவத்தில் உயிரிழப்பு என்றால்,இந்த 15 ஆண்டு சிறை தண்டனை பரவாயில்லை. ஆனா‌ல் இப்படி கொடூரமாக செய்யப்பட்ட கொலைக்கு குறைந்தது மரணதண்டனை என்பதை சரி. குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான பல கொடூரமான கொலை வழக்குகளில் சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் குடிமக்கள் குற்றவாளி என்றால் மரணதண்டனை என்பதே விதிக்கப்படவில்லை என்பதை பார்க்க முடிக்கிறது. சமீபத்திய தீர்ப்புகளை பார்த்தால் வெளிநாட்டினருக்கு நீதி மறுக்கப்படுகிறதா...?? என்ற எண்ணம் தோன்றுகிறது.

Kuwait Police | Kuwaity Man | Shop Worker

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

Wednesday, July 22, 2026

குவைத்தில் வசிக்கின்ற இந்தியர்களின் எண்ணிக்கை 1 மில்லியன் கடந்து முதல் வெளிநாட்டு சமூகம் என்ற இடத்தை பிடித்துள்ளது

குவைத் குடிமைத் தகவல் ஆணையம் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின் படி நாட்டின் மொத்த மக்கள் தொகை 5.31 மில்லியனாக அதிகரித்துள்ளது

Image : குவைத் இந்திய தூதரக வளாகம்

குவைத்தில் வசிக்கின்ற இந்தியர்களின் எண்ணிக்கை 1 மில்லியன் கடந்து முதல் வெளிநாட்டு சமூகம் என்ற இடத்தை பிடித்துள்ளது

குவைத் குடிமைத் தகவல் ஆணையம் நேற்று(21/07/26) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, குவைத்தின் மொத்த மக்கள் தொகை ஜூன் 30 நிலவரப்படி 5.31 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதனுடன், இந்தியர்களின் எண்ணிக்கையும் 1.06 மில்லியனாக அதிகரித்துள்ளது(பத்து லட்சத்து அறுபதாயிரம்). நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 1.56 மில்லியன் பேர் குவைத் குடிமக்கள்(30 சதவீதம்) மற்றும் 3.74 மில்லியன் பேர் வெளிநாட்டவர்களும் ஆவார்கள்(70 சதவீதம்).

வெளிநாட்டவர்களில் 10,60,000(20 சதவீதம்) பேருடன் முதல் இடத்தில் உள்ள இந்தியர்களுக்கு அடுத்தபடியாக, சுமார் 670,000 பேருடன்(13 சதவீதம்) எகிப்தியர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளனர். 333,060 பேருடன்(6 சதவீதம்) வங்காளதேசத்தினர் மூன்றாம் இடத்திலும், 226,500 பேருடன்(4 சதவீதம்) பிலிப்பைன்ஸ் நாட்டினர் நான்காம் இடத்திலும், 201,500 பேருடன்(4 சதவீதம்) சிரியா நாட்டினர் ஐந்தாம் இடத்திலும், 197,400 பேருடன் (4 சதவீதம்) இலங்கையர்கள் ஆறாம் இடத்திலும், 186,600 பேருடன் (4 சதவீதம்) நேபாளிகள் ஏழாம் இடத்திலும், 155,500 பேருடன் (3 சதவீதம்) சவுதி நாட்டினர் எட்டாம் இடத்திலும், 105,700 பேருடன்(2 சதவீதம்) பாகிஸ்தானியர்கள் ஒன்பதாம் இடத்திலும் உள்ளனர்.

இதற்கிடையே நாட்டில் வேலை செய்கின்றவர்கள் எண்ணிக்கை 32.64 லட்சமாக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 லட்சம் பேர் வெளிநாட்டினர் ஆவார்கள். நாட்டின் மொத்த தொழிலாளர்களில் 28.8 சதவீதம் பேர் இந்தியர்கள். எகிப்து 14.6%, குவைத்திகள் 14.2%, பங்களாதேஷ் 9.9%, பிலிப்பைன்ஸ் 6.6%, இலங்கை 5.8%, நேபாளம் 5.7%, சிரியா 2.3%, பாகிஸ்தான் 2.3% மற்றும் ஜோர்டான் 1% என்றும் புள்ளிவிவரங்கள் தெளிவு படுத்துகின்றன.

அதேபோல் தனியார் துறையில் பணிபுரிபவர்களில் 30.7 சதவீதம் பேரும் இந்தியர்கள் ஆவார்கள், இந்தியர்களுக்கு அடுத்த படியாக இந்தத் துறையில் 23.6 சதவீத எகிப்தியர்களும், 11.2 சதவீத பங்களாதேசியர்களும் பணியாற்றுகின்றனர். அதேநேரம் அரசு துறைகளில் வேலை செய்கின்ற ஊழியர்களில் சுமார் 74.7 சதவீதம் பேரும் குவைத் நாட்டவர்கள் ஆவார்கள், அவர்களுக்கு அடுத்தபடியாக 7.1 சதவீத எகிப்தியர்களும், 5.1% இந்தியர்களும் பணிபுரிகின்றனர்.

நாட்டில் 8.83 லட்சம் வெளிநாட்டினர் வீட்டுப் பணியாளர்களாக உள்ளனர். நாட்டிலுள்ள மொத்த தொழிலாளர்களில் 27 சதவீதமும், மக்கள் தொகையில் 17 சதவீதமும் இவர்களே ஆவார்கள். அதேபோல் இவர்களில் 57.7 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். இதிலும் இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர் 39 சதவீதம். இலங்கையர்கள் 17.9%, பிலிப்பைன்ஸ் 17.1%, பங்களாதேஷ் 12.1% மற்றும் நேபாளம் 7.8% வேலை செய்வதாகவும் புள்ளிவிவர கணக்குகள் தெரிவிக்கின்றன.

Kuwait Population | Gulf Workers | Indian People

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

குவைத்தில் உங்களுடைய வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எந்தெந்த சூழ்நிலையில் முடிவுக்கு வரும் என்பது குறித்து மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது:

குவைத் மனிதவள ஆணையம் வெளியிட்ட விழிப்புணர்வுப் பதிவு ஒன்றில் தொழிலாளர் சட்ட விதிகளின்படி வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எந்தெந்த சூழ்நிலையில் முடிவுக்கு வரும் என்பது குறித்து விளக்கத்தை அளித்துள்ளது

Image : குவைத் திறந்த வெளி தொழிலாளர்கள்

குவைத்தில் உங்களுடைய வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எந்தெந்த சூழ்நிலையில் முடிவுக்கு வரும் என்பது குறித்து மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது:

குவைத் மனிதவள ஆணையம் இன்று(22/07/26) புதன்கிழமை வெளியிட்ட விழிப்புணர்வுப் பதிவு ஒன்றில், தொழிலாளர் சட்ட விதிகளின்படி வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எந்தெந்த சூழ்நிலையில் முடிவுக்கு வரும் என்பது குறித்து விளக்கத்தை அளித்துள்ளது. இதில், சட்டத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் தானாகவே முடிவுக்கு வரும் சூழல்கள் மற்றும் வேலையளிப்பவர் மற்றும் தொழிலாளி ஆகிய இரு தரப்பினரின் உரிமைகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட சூழல்களில் தொழிலாளியின் பணியை முடிவுக்குக் கொண்டு வரும் உரிமை வேலையளிப்பவருக்கு(முதலாளிக்கு) உண்டு என்று ஆணையம் விளக்கியுள்ளது. இதில், காலவரையற்ற ஒப்பந்தங்களில் உரிய அறிவிப்புக் காலத்தைக்(Notice Period) கடைப்பிடித்து பணிநீக்கம் செய்வது அல்லது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தீவிரமான குற்ற செயல்களில் ஈடுபட்ட காரணங்களுக்காகப் பணிநீக்கம் செய்வது ஆகியவை அடங்கும். அதேவேளையில், பணிநீக்க முடிவு தவறானது என்று கருதினால், தொழிலாளர் சட்டத்தின் 41, 44 மற்றும் 46-வது பிரிவுகளின்படி மேல்முறையீடு செய்வதற்கான உரிமை அத்தொழிலாளிக்கு உண்டு எனவும் விளக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உரிமை தொழிலாளிக்கு உண்டு என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது. தொழிலாளர் சட்டத்தின் 48-வது பிரிவின்படி, வேலையளிப்பவர்(Sponsor) ஒப்பந்தம் அல்லது தொழில் சட்டத்தை மீறுதல், முதலாளி அல்லது அவரது நிறுவனத்தின் துணை அதிகாரிகளின் தாக்குதல் அல்லது தொழிலாளியின் பாதுகாப்பு அல்லது ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் போன்ற குறிப்பிட்ட நிகழ்வுகளில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வேலையை விட்டு விலகவும், அதே சமயம் பணிக்கால நிறைவுக்கான ஊக்கத்தொகையைப்(End Of Service Bonus) பெறவும் அவருக்கு உரிமை உண்டு.

அதேபோல் சில குறிப்பிட்ட சூழல்களில் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் தொழிலாளர் சட்டத்தின் 49 மற்றும் 50-வது பிரிவுகளின்படி தானாகவே முடிவுக்கு வருகிறது என்றும் ஆணையம் விளக்கியுள்ளது. இதில் தொழிலாளியின் மரணம், வேலை செய்ய இயலாமைக்கான ஆதாரம், மருத்துவ விடுப்பு முழுவதையும் பயன்படுத்திய பிறகும் தொடரும் நோய், நிறுவனத்தை நிரந்தரமாக மூடுதல் அல்லது தொழிலாளிக்கு வேலையளிப்பவர் திவாலானதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் இறுதித் தீர்ப்பு ஆகியவை சூழ்நிலைகளில் சட்டத்தின் செயல்பாட்டின் மூலம் ஒப்பந்தம் முடிவடைகிறது..

Kuwait Worker | Labor Law | Kuwait Workers

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

Tuesday, April 21, 2026

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகள் சுமத்தி நாடுகடத்திய அதிகாரிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது:

குவைத்தில் தொழிலாளர்களை மிரட்டி பணம் பறிப்பதை தொழிலாக கொண்டிருந்த அதிகாரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையினை குற்றவியல் நீதிமன்றம் விதித்துள்ளது

Image : செய்தி பதிவுக்காக பதிவிறக்கம் செய்யப்பட்டது

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகள் சுமத்தி நாடுகடத்திய அதிகாரிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது:

குவைத்தில் தொழிலாளர்களை மிரட்டி பணம் பறிப்பதை தொழிலாக கொண்டிருந்த அதிகாரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையினை குற்றவியல் நீதிமன்றம் விதித்துள்ளது. குவைத்தில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை நாடு கடத்துவதாக மிரட்டி அவர்களிடம் இருந்து தொடர்சியாக பணம் பறித்து வந்த ஒரு காவல்துறை உயர் அதிகாரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், 800 தினார் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

நாட்டின் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல் வஹாப் அல்-முவேலி தலைமையிலான அமர்வு இந்த அதிரடியான தீர்ப்பை நேற்றைய(20/04/26) தினம் வழங்கியது. தலைநகர மாகாணமான Al Asimah பகுதியிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அதிகாரிக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டன. மேலும் இந்தத் தீர்ப்பில் அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இவர் மீது தொடரப்பட்ட வழக்கில் முக்கியமான ஒன்று நாட்டில் வேலையின் நிமித்தமாக தங்கியிருந்த பல வெளிநாட்டினரை மிரட்டி பணம் பறிப்பதாகும், இதற்கு இணங்காத,பலரை பொய்க் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து நாடு கடத்துவது இவர் வேலையாக செய்து வந்தார் என்பதாகும். அதேநேரம் இவருடைய பெயர் விபரங்கள், பதவி உள்ளிட்டவை தொடர்பான கூடுத‌ல் தகவல்கள் எதுவும் வெளியாகியுள்ள செய்தியில் வெளியிடவில்லை.

Kuwait Worker | Kuwait Police | Kuwait Jails

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

Thursday, April 9, 2026

குவைத் விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டது மற்றும் தொடங்கும் என்று பரவிய செய்திகளை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரி மறுத்துள்ளனர்

குவைத் விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டது மற்றும் தொடங்கும் என்று பரவிய செய்திகளை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரி மறுத்துள்ளனர்

Image : செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல்-ராஜ்ஹி 

குவைத் விமான நிலையம் செயல்பட தொடங்கியதாக வெளியான செய்தி ஆதாரமற்றவை

குவைத் சர்வதேச விமான நிலையம் விரைவில் மீண்டும் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும், இதற்கான பணிகள் முன்னேறி வருவதாக, குவைத் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்ததாக தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டதாக பல சமூக வலைதளங்களில் இன்று(09/04/26) மதியம் முதல் செய்திகள் தீயாக பரவின. இதையடுத்து குவைத்தின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாள அப்துல்லா அல்-ராஜ்ஹி இந்த செய்தியை தற்போது முற்றிலுமாக மறுத்துள்ளார்.

மேலும், இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் 1:00 மணிக்கு ஜசீரா ஏர்வேஸ் விமானம் ஒன்று குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நேரடியாகத் தரையிறங்கியதாகவும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தவிர, இன்று மாலையில் மற்றொரு குவைத் ஏர்வேஸ் விமானம் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நேரடியாகத் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், விமான நிலையம் எந்த நேரத்திலும் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்திருந்தன. இந்த தகவல்களையும் அதிகாரிகள் மறுத்துள்ளார்.

மேல் குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும் தவறானது என்று வலியுறுத்திய அல்-ராஜ்ஹி, இன்று இதுவரை எந்த அனுமதிகளும் வழங்கப்படவில்லை என்றும், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ மூலங்கள் மூலம் தகவல்களைச் சரிபார்த்து, நம்பகமற்ற இணையச் செய்திகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பிராந்தியத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, குவைத் தனது வான்வெளியை மூடி, விமான நிலையச் செயல்பாடுகளை கடந்த பிப்ரவரி-28,2026 முதல் இடைநிறுத்தியது குறி்ப்பிடத்தக்கது.

Indian Worker | Kuwait Airport | Airport Reopen

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

Sunday, December 14, 2025

தமிழக வெற்றிக் கழகம் பஹ்ரைன் பிரிவு சார்பி்ல் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமை நடத்தியுள்ளது

பஹ்ரைனின் தேசிய தினத்தை முன்னிட்டு தவெக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றன

Image : முகாம் நடைபெற்ற காட்சிகள்

தமிழக வெற்றிக் கழகம் பஹ்ரைன் பிரிவு சார்பி்ல் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமை நடத்தியுள்ளது

பஹ்ரைனின் 54-வது தேசிய தினத்தை முன்னிட்டு சல்மானிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்கமும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்தானம் செய்தார்கள்.

Image : முகாம் நடைபெற்ற காட்சிகள்

அவர்கள் அனைவருக்கும் பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் என்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர். பஹ்ரைனில் டிசம்பர்-16 மற்றும் டிசம்பர்-17 ஆகிய இரு தினங்கள் தேசியதின கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

Image : முகாம் நடைபெற்ற காட்சிகள்

Indian Worker | Bahrain Tvk | Bahrain Vijay

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to