Kuwait News
Kuwait News/block-2
குவைத்தில் தொழிலாளர்களை மிரட்டி பணம் பறிப்பதை தொழிலாக கொண்டிருந்த அதிகாரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையினை குற்றவியல் நீதிமன்றம் விதித்துள்ளது
Image : செய்தி பதிவுக்காக பதிவிறக்கம் செய்யப்பட்டது
குவைத்தில் தொழிலாளர்களை மிரட்டி பணம் பறிப்பதை தொழிலாக கொண்டிருந்த அதிகாரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையினை குற்றவியல் நீதிமன்றம் விதித்துள்ளது. குவைத்தில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை நாடு கடத்துவதாக மிரட்டி அவர்களிடம் இருந்து தொடர்சியாக பணம் பறித்து வந்த ஒரு காவல்துறை உயர் அதிகாரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், 800 தினார் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது.
நாட்டின் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல் வஹாப் அல்-முவேலி தலைமையிலான அமர்வு இந்த அதிரடியான தீர்ப்பை நேற்றைய(20/04/26) தினம் வழங்கியது. தலைநகர மாகாணமான Al Asimah பகுதியிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அதிகாரிக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டன. மேலும் இந்தத் தீர்ப்பில் அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
இவர் மீது தொடரப்பட்ட வழக்கில் முக்கியமான ஒன்று நாட்டில் வேலையின் நிமித்தமாக தங்கியிருந்த பல வெளிநாட்டினரை மிரட்டி பணம் பறிப்பதாகும், இதற்கு இணங்காத,பலரை பொய்க் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து நாடு கடத்துவது இவர் வேலையாக செய்து வந்தார் என்பதாகும். அதேநேரம் இவருடைய பெயர் விபரங்கள், பதவி உள்ளிட்டவை தொடர்பான கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகியுள்ள செய்தியில் வெளியிடவில்லை.
Kuwait Worker | Kuwait Police | Kuwait Jails
குவைத் விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டது மற்றும் தொடங்கும் என்று பரவிய செய்திகளை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரி மறுத்துள்ளனர்
Image : செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல்-ராஜ்ஹி
குவைத் சர்வதேச விமான நிலையம் விரைவில் மீண்டும் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும், இதற்கான பணிகள் முன்னேறி வருவதாக, குவைத் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்ததாக தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டதாக பல சமூக வலைதளங்களில் இன்று(09/04/26) மதியம் முதல் செய்திகள் தீயாக பரவின. இதையடுத்து குவைத்தின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாள அப்துல்லா அல்-ராஜ்ஹி இந்த செய்தியை தற்போது முற்றிலுமாக மறுத்துள்ளார்.
மேலும், இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் 1:00 மணிக்கு ஜசீரா ஏர்வேஸ் விமானம் ஒன்று குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நேரடியாகத் தரையிறங்கியதாகவும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தவிர, இன்று மாலையில் மற்றொரு குவைத் ஏர்வேஸ் விமானம் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நேரடியாகத் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், விமான நிலையம் எந்த நேரத்திலும் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்திருந்தன. இந்த தகவல்களையும் அதிகாரிகள் மறுத்துள்ளார்.
மேல் குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும் தவறானது என்று வலியுறுத்திய அல்-ராஜ்ஹி, இன்று இதுவரை எந்த அனுமதிகளும் வழங்கப்படவில்லை என்றும், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ மூலங்கள் மூலம் தகவல்களைச் சரிபார்த்து, நம்பகமற்ற இணையச் செய்திகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பிராந்தியத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, குவைத் தனது வான்வெளியை மூடி, விமான நிலையச் செயல்பாடுகளை கடந்த பிப்ரவரி-28,2026 முதல் இடைநிறுத்தியது குறி்ப்பிடத்தக்கது.
Indian Worker | Kuwait Airport | Airport Reopen
பஹ்ரைனின் தேசிய தினத்தை முன்னிட்டு தவெக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றன
Image : முகாம் நடைபெற்ற காட்சிகள்
பஹ்ரைனின் 54-வது தேசிய தினத்தை முன்னிட்டு சல்மானிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்கமும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்தானம் செய்தார்கள்.
Image : முகாம் நடைபெற்ற காட்சிகள்
அவர்கள் அனைவருக்கும் பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் என்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர். பஹ்ரைனில் டிசம்பர்-16 மற்றும் டிசம்பர்-17 ஆகிய இரு தினங்கள் தேசியதின கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
Image : முகாம் நடைபெற்ற காட்சிகள்
குவைத்தில் தனது மனைவியை திட்டமிட்டு உயிர் போகும் வரையில் சுத்தியலால் அடித்து கொடூரமாக கொன்ற வழக்கில் இந்தியருக்கு இன்று வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது
Image : குவைத் நீதிமன்ற வளாகம்
குவைத்தில் தனது மனைவியைக் கொலை செய்ததற்காக இந்தியருக்கு இன்று(11/12/25) வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நயீப் அல்-டஹூம் தலைமையிலான அமர்வு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கொலையாளிக்கும் அவரது மனைவிக்கும் இடையே பணப்பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டதன் விளைவாக ஏற்பட்ட விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டுச் செலவுகளுக்கு மற்றும் உணவை வாங்கவும் பணம் சரியாக வழங்காத காரணத்தால், செலவை ஆளுக்கு பாதி என்ற அளவில் சரிசமமாக செலவு செய்யலாம் என்று உயிரிழந்த மனைவி கூறியதால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கணவர் சமரசம் ஆனது மாதிரி நடித்து, சால்மி பாலைவன பகுதிக்கு அழைத்துச் சென்று சுத்தியலால் அடித்து மனைவியை கொலை செய்தார்.
மேலும் உயிர் போகும் வரையில் குற்றவாளி உயிரிழந்த தன்னுடைய மனைவியை தொடர்ந்து சுத்தியலால் தாக்கியதாகவும் குற்றவாளி காவல்துறை விசாரணையில் ஒப்புக்கொண்டிருந்தார். எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொடூரமான கொலை என்பதை உறுதி செய்த நீதிபதி கணவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். உயிரிழந்த மனைவி மற்றும் குற்றவாளியான கணவன் இருவரும் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை.
Indian Worker | Killing Wife | Kuwait Court
பேரிடர் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கையின் புனரமைப்பு பணிகளுக்கான பிரபல லுலு குழும தலைவர் 1,00,000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ள நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது
Image : யூசுப் அலி காசோலையினை வழங்கிய காட்சி
இலங்கையின் வெள்ள நிவாரண முயற்சிகளுக்கு 1,00,000 அமெரிக்க டாலர்களை(இலங்கை ரூபாய் மதிப்பில் 3 கோடி ரூபாய்) வழங்கியதற்காக லுலு குழும நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான யூசுப் அலி அவர்களுக்கு அமீரகதற்கான இலங்கை தூதரகம் நன்றியைத் தெரிவித்துள்ளது .
அவருடைய பங்களிப்பு இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், இந்தப் பங்களிப்பு லுலு குழுமத்தின் கருணை மற்றும் மனிதாபிமான உதவிகளை தொடந்து வழங்கும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக நிற்கிறது என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் தூதரகம் தெரிவித்துள்ளது.
Srilanka Workers | Yusufali Lulu | Srilanka Flood
குவைத்தில் இன்று காலையில் மண்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து நடந்த விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது
Image : மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்
குவைத்தின் அல்-ராய் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஒரு கட்டிடத்திற்குள் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
Image: மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்
இன்று(09/12/25) செவ்வாய்க்கிழமை காலையில் நடந்த இந்த துயரமான சம்பவத்தை தொடர்ந்து விரைந்து வந்த ஷுவாய்க் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த துயரமான சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களுடைய உடல்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன.
மேலும் கட்டிடத்தின் கீழ் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தலைமையில் தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.உயிரிழந்த தொழிலாளர்கள் எந்த நாட்டவர்கள் என்ற கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை.
Indian Workers | Kuwait Accident | Gulf Worker
குவைத்திலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு சென்ற இந்திய இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது
Image : உயிரிழந்த இளைஞர் பிருத்விராஜ்
குவைத்தில் வேலை செய்து வந்த பிருத்விராஜ்(27) என்ற இந்திய இளைஞர் சொந்த ஊரில் நேற்றிரவு நடந்த விபத்தில் மரணமடைந்தார். இவர் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள முண்டூரைச் சேர்ந்தவர் ஆவார். பாலக்காடு கண்ணாடி அடுத்த லுலு மால் அருகே வைத்து நேற்று(02/12/25) செவ்வாய்க்கிழமை இரவு 11:00 மணி அளவில் நடந்த வாகன விபத்தில் சிக்கி கொண்டார்.
குவைத்தில் கடந்த பல வருடங்களாக வேலை செய்து வந்த பிருத்விராஜ், துபாய்க்கு வேலை மாற்றம் கிடைத்ததை தொடர்ந்து, விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில் விபத்தில் சிக்கி கொண்டார். இவருடைய தந்தை ஹரிதாசன் முத்து குவைத்திலுள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். மகனின் மரண செய்தி அறிந்த அவர் இன்று(03/12/25) புதன்கிழமை இரவு ஊருக்கு திரும்புகிறார்.
Indian Worker | Road Accident | Kuwait Worker
Till now, we were covering news and updates from Kuwait, from now on we are widening our area to all over the GCC. This new modification has been made to covering all GCC news under one domain arabtamildaily.com. We continue to look forward to the support we have received so far from our readers. Also follow us on Linktree
To advertise with us contact on "+919486443352" or drop an email to "editoratdnews@gmail.com"