BREAKING NEWS
latest

Sunday, November 27, 2022

குவைத்தில் காலரா நோய் கண்டறியப்பட்ட நிலையில் பயண நடைமுறைகளில் மாற்றம் இல்லை என சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது:

குவைத் விமான நிலைய பயணிகளுக்கான பயண விதிமுறையில் மாற்றங்கள் எதுவும் இல்லை சுகாதாரத்துறை விளக்கம்

Image : Kuwait Airport

குவைத்தில் காலரா நோய் கண்டறியப்பட்ட நிலையில் பயண நடைமுறைகளில் மாற்றம் இல்லை என சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது:

இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது நிலைமை சீராக கட்டுக்குள் உள்ளது எனவும், ஆனால் எந்த அவசரச் சூழலையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் நோய் பரவும் நாடுகளுக்குச் செல்பவர்கள் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் காலரா நோய் கண்டறியப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் பத்திரமாக அடைக்கப்பட்ட பாட்டிலில் வரும் சுத்தமான தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும். பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும் நன்கு சமைத்த சூடான உணவு மட்டுமே சாப்பிட வேண்டும் எனவும்,பால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை மக்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு(வெள்ளிக்கிழ‌மை) ஈராக்கில் இருந்து குவைத் திரும்பிய குவைத் குடிமகன் ஒருவருக்கு காலரா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் பரவிய சில வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் இந்த அறிக்கையை குவைத் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளன.

Add your comments to

Thursday, November 24, 2022

குவைத்தில் சட்டவிரோதமாக வசிக்கின்ற நபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது:

குவைத்தில் சட்டவிரோதமாக வசிக்கின்ற நபர்களின் எண்ணிக்கை கடுமையான சோதனைகளை தொடர்ந்து கணிசமாக குறைந்துள்ளது

Image credit:Kuwait Police Official

குவைத்தில் சட்டவிரோதமாக வசிக்கின்ற நபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது

குவைத்தில் சட்டவிரோதமாக வசிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. நாட்டில் சுமார் 150,000 பேர் வரையில் குடியிருப்பு சட்டத்தை மீறி தங்கியிருந்தனர். ஆனால் இது தற்போது 136,000 ஆக குறைந்துள்ளது என்று தினசரி நாளிதழ் ஒன்று உள்துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. வீட்டுவசதித்துறை மற்றும் மனிதவளத்துறை தலைமையில் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைகளின் விளைவாக சட்டவிரோதமாக தங்கியிருந்த நபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

ஆனால் சமீபத்தில் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக நாடு கடத்தப்பட்ட சிலர் மீண்டும் குவைத் திரும்பியுள்ளனர். இவர்கள் மதுபானம் தயாரித்தல் தொடர்பான சட்டத்தை மீறியதைத் தொடர்ந்து மீண்டும் பிடிபட்டுள்ளனர். குடியிருப்பு சட்டத்தை மீறுபவர்களில் பெரும்பாலானோர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதே நேரத்தில் நாட்டின் சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கான குடியிருப்பு ஆவணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான பொது மன்னிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Add your comments to

Sunday, November 20, 2022

குவைத்தில் இடைநிறுத்தபட்ட குடும்ப விசாக்கள் வழங்கும் பணிகள் வரும் தினங்களில் மீண்டும் துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளன:

குவைத் விரைவில் குடும்ப விசாக்கள் வழங்கும் பணிகளை துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளன

Image:(Visa Copy)

குவைத்தில் இடைநிறுத்தபட்ட குடும்ப விசாக்கள் வழங்கும் பணிகள் வரும் தினங்களில் மீண்டும் துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளன:

குவைத்தில் வேலை செய்து வருகின்ற வெளிநாட்டு தொழிலாளர்களில் குடும்ப விசாக்கள் பெறுவதற்கு தகுதியான நபர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்துவருவதற்கான விசாக்கள் வழங்குவதற்கான அனுமதியை வழங்கும் அறிவிப்பு வரும் சில தினங்களில் வெளியாகும் என்று தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக குழந்தைகளுக்கும், அடுத்தகட்டமாக உ‌ள்துறை அமைச்சகம் வரையறை செய்துள்ள புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு மனைவி, தாய்,தந்தை உள்ளிட்டவர்களை அழைத்துவர வழங்குவதற்கான அனுமதியும் அளிக்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையே குவைத் கட்டுப்பாடுகள் விதித்துள்ள ஒருசில நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளை சேர்ந்த மக்களுக்கும் குவைத்தில் வேலைக்கு வருவதற்கான Work Permit எந்த தடையுமின்றி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் குவைத்தில் வசிக்கின்ற மக்கள்தொகை சதவீதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சீர்செய்யும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த பல மாதங்களாக குடும்ப விசாக்கள் வழங்கும் பணிகள் இடைநிறுத்தபட்டு இருந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளன.

Add your comments to

Wednesday, November 16, 2022

குவைத்தில் இன்று பெண் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

(Image Credit : புகைப்படம் செய்தி பதிவுக்காக மட்டுமே)

குவைத்தில் இன்று பெண் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று அதிகாலையில் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த தண்டனை நிறைவேற்றும் நிகழ்வு அரசு வழக்கறிஞர் தலைமையில் நடந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த 7 பேரில் குவைத் நாட்டை சேர்ந்த குடிமகன்கள் 4 பேர், ஒரு சிரியா நாட்டை சேர்ந்த ஆண், ஒரு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆண் மற்றும் ஒரு எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த பெண் ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவருக்கும் திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கும் நீதிமன்ற தீர்ப்புக்கு இறுதி முடிவாக அமீர்(மன்னர்) ஒப்புதல் அளித்ததை அடுத்து, இன்று புதன்கிழமை அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடைசியாக குவைத்தில் கடந்த ஜனவரி 2017-இல் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு தற்போது மீண்டும் ஒரே நேரத்தில் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Add your comments to

Friday, February 18, 2022

குவைத்தில் பிப்ரவரி-20 முதல் தடுப்பூசி எடுக்காத வெளிநாட்டினரும் நுழைய அனுமதி வழங்கப்படும் என்ற திருத்தப்பட்ட புதிய அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளன

குவைத்தில் பிப்ரவரி-20 முதல் தடுப்பூசி எடுக்காத வெளிநாட்டினரும் நுழைய அனுமதி வழங்கப்படும் என்ற திருத்தப்பட்ட புதிய அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளன

Image credit: Kuwait Airport

குவைத்தில் தடுப்பூசி எடுக்காத வெளிநாட்டினரும் நுழைய அனுமதி வழங்கும் திருத்தப்பட்ட அறிவிப்பு இன்று மாலை வெளியாகியுள்ளன

குவைத்துக்குள் தடுப்பூசி போடாத வெளிநாட்டினரும் நுழையலாம் என சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளனர். அமைச்சரவையால் கடந்த வாரம் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி குவைத் அனுமதி வழங்கியுள்ள கோவிட் தடுப்பூசி போடாத வெளிநாட்டினரும் குவைத்துக்குள் நுழையலாம் என குவைத் சிவில் ஏவியேஷன் சற்றுமுன்(18/02/2022) வெள்ளிக்கிழமை திருத்தப்பட்ட இறுதியான புதிய அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட முடிவின்படி தடுப்பூசி போடாத வெளிநாட்டவர்களும் குவைத்துக்குள் நுழையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில். நேற்று(17/02/2022) வியாழக்கிழமை திடிரென கோவிட் தடுப்பூசி போடாத குவைத் குடிமக்கள் மட்டுமே நுழைய அனுமதி என்று திருத்திய அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதனா‌ல் குவைத் நுழைய ஆவலுடன் காத்திருந்த வெளிநாட்டினர் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று வெளிநாட்டினர் நுழைய தடை விதிக்கப்பட்ட அறிவிப்பே தற்போது மீண்டும் ரத்து செய்துள்ளது.

எனவே இன்று மாலையில் வெளியிடப்பட்ட மிகவும் புதிய அறிவிப்பின்படி தடுப்பூசி எடுக்காத வெளிநாட்டினர் மீண்டும் நுழையலாம் என்ற வாசல் திறந்துள்ளது. ஆனால் தடுப்பூசி எடுக்காத வெளிநாட்டினர் குவைத்தில் நுழைய 72 மணி நேரத்திற்குள் செல்லுபடியாகும் எதிர்மறை(Negative) எடுத்துவர வேண்டும். மற்றும் குவைத்திற்கு வந்தவுடன் 7 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் செய்து கொள்ள வேண்டும். இந்த முடிவு பிப்ரவரி-20,2022 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 00:01 மணி முதல் அமலுக்கு வரும்.

Add your comments to

குவைத்தில் ஒரு வினோதமான வழக்கில்,இந்திய ஹவுஸ் டிரைவர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மந்திரவாதி கைது செய்யப்பட்டார்:

குவைத்தில் ஒரு வினோதமான வழக்கில் இந்தியாவை சேர்ந்த ஹவுஸ் டிரைவர் மற்றும் மந்திரவாதி கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது

Image : கைது செய்யப்பட்ட இந்தியர்கள்

குவைத்தில் ஒரு வினோதமான வழக்கில்,இந்திய ஹவுஸ் டிரைவர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மந்திரவாதி கைது செய்யப்பட்டார்:

குவைத்தில் ஒரு வினோதமான வழக்கில்,இந்திய ஹவுஸ் டிரைவர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மந்திரவாதியை இரகசிய புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். குவைத்திலுள்ள பணக்காரரான தொழிலதிபரை(குவைத்தி) சூனியம் செய்து இருவரும் ஸ்பான்சரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ஸ்பான்சரின் சகோதரர்கள் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான விபரங்கள் வருமாறு:

தொழிலதிபரான(குவைத்தி) தன்னுடைய அண்ணனை ராஜு என்ற இந்திய ஹவுஸ் டிரைவர் முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அவர் மாந்திரீகம் மூலம் தன்னுடைய அண்ணனை தன்வசம் வைத்துள்ளதாக சந்தேகம் இருப்பதாக சகோதரர்கள் புகார் அளித்தனர். 150 தினார் மட்டுமே சம்பளம் பெறும் டிரைவர் விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களை பயன்படுத்துவதாகவும், அவர் தினமும் அணியும் விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் காலணிகள் சராசரியான ஓட்டுநரின் வாழ்க்கைத் தரத்துடன் ஒத்துப்போகவில்லை என்றும் சகோதரர்களின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த புகாரில் இவர்களது அண்ணன் மட்டுமல்லாமல் வீடு முழுவதும் இப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும். அவர்(ஓட்டுநர்) சமீபத்தில் First-class விமான டிக்கெட்டில் நாட்டிற்க்கு பயணம் செய்து பிறகு குவைத் திருப்பினார் எனவும்,தங்கள் சகோதரரின் பெரும் மதிப்பிலான பணத்தை கொள்ளையடிப்பதாக சந்தேகிக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சகோதரர்களின் புகாரின் பேரில் உளவுப்பிரிவு அதிகாரிகள் டிரைவரை கடந்த பல நாட்களாக கண்காணித்தனர்.

தொடர்ந்து ஓட்டுநர் அவ்வப்போது சொகுசு குடியிருப்புக்கு ஒன்றுக்கு சென்று வருவதும், அங்கு வேறு யாரோ தங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதன்பிறகு டிரைவரை அதிகாரிகள் பிடித்து நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ஸ்பான்சரை மயக்க இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பிரபல மந்திரவாதி தான் மாந்திரீகம் செய்ததாகவும் விசாரணை அதிகாரிகளிடம் டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஸ்பான்சரின் வீட்டு முற்றத்தில் பல இடங்களில் மந்தீரிக தகட்டை புதைத்து வைத்ததாகவும் ஓட்டுநர் விசாரணையின் போது வெளிப்படுத்தியுள்ளார். முன்னதாக ஸ்பான்சரிடம் இருந்து நிறைய பணத்தை திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து விசாரணைக் குழுவினர் இருவரையும் கைது செய்தனர்.

கூடுதல் விசாரணைக்காக ஸ்பான்சரான தொழிலதிபரை காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார். காவல் நிலையம் வந்த ஸ்பான்சர் தனது ஓட்டுநரை கைது செய்ததைக் கண்டதும் மயங்கி விழுந்தார். பல வருடங்களாக சொந்த மகனைப் போல் நேசித்த ராஜு அப்படிப்பட்ட நபர் இல்லை எனவும்,அவரை விடுவிக்குமாறு புலனாய்வு அதிகாரிகளிடம் ஸ்பான்சர் கெஞ்சியதால் அதிகாரிகள் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர். புகார் அளித்த சகோதரர்கள் கூறுகையில் தங்கள் சகோதரர் பலத்த மந்தீரிக வலையத்தில் சிக்கியுள்ளதாகக் கூறுகின்றனர்.

Add your comments to

Tuesday, February 15, 2022

குவைத்தில் கோவிட் மூலம் நாட்டில் நுழைய பயணிகளுக்கு விதிக்கப்பட்ட பல கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டன,விரைவில் நடைமுறையில்

குவைத்தில் கோவிட் மூலம் விதிக்கப்பட்ட பல கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டன பிப்ரவரி-20 முதல் அமலுக்கு வருகின்றன

Image : செய்தி தொடர்பாளர்

குவைத்தில் கோவிட் மூலம் நாட்டில் நுழைய பயணிகளுக்கு விதிக்கப்பட்ட பல கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டன,விரைவில் நடைமுறையில்

குவைத் கோவிட் சூழலில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அறியப்பட்டன. நாட்டின் சுகாதார நிலை மேம்பட்டு வருவதால் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று(14/02/2022) திங்கட்கிழமை மாலையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பின்வரும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. புதிய முடிவு பிப்ரவரி 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன. அதன் விபரங்கள் பின்வருமாறு:

குவைத் அங்கிகாரம் வழங்கியுள்ள தடுப்பூசி டோஸ் முடிந்த பிறகு நாட்டிற்குள்(குவைத்திற்குள்) நுழையும் பயணிகளுக்கான புறப்பாடு நாட்டில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் எடுத்துவர வேண்டும் என்ற முடிவு ரத்து செய்யப்பட்டது. இதன் பொருள் இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் எடுத்துவர வேண்டாம்

ஆனால் அவர்கள் குவைத்தில் நுழைந்து 7 நாள் வீட்டு தனிமைப்படுத்தல் செய்ய வேண்டும். இருந்தாலும் இவர்கள் நாட்டை(குவைத்தை) அடைந்தவுடன் பி.சி.ஆர் பரிசோதனை செய்தி முடிவு எதிர்மறையாக(Negative) இருந்தால் அன்றைய தினம் தனிமைப்படுத்தலை உடனடியாக முடித்து கொள்ளலாம்.

புதிய முடிவின்படி தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடாத நபர்களுக்கும் குவைத்தில் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது இருப்பினும், தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு குவைத்தில் நுழைவதற்கு 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை எதிர்மறை(Negative) சான்றிதழ் எடுத்துவர வேண்டும் மற்றும் 7 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் செய்து கொள்ள வேண்டும்.

பொது போக்குவரத்து முழுமையான(100 சதவீதம்) அளவில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

வணிக வளாகங்களுக்குள் நுழைவதற்காக பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது.

மேலும் வருகின்ற மார்ச்-13,2022 முதல் அரசு சார்ந்த நிறுவனங்கள் முழு அளவில்(100 சதவீதம்) ஊழியர்களுடன் செயல்படும்.

Add your comments to

Monday, February 14, 2022

சர்வதேச பயணிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய சலுகைகள் குவைத் மற்றும் அமீரகத்திற்கு பொருந்தாது

சர்வதேச பயணிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன

Image : Chennai Airport

சர்வதேச பயணிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய சலுகைகள் குவைத் மற்றும் அமீரகத்திற்கு பொருந்தாது

சர்வதேச பயணிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய சலுகைகள் இன்று(14/02/2022) திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.இருப்பினும், குவைத் மற்றும் அமீரகத்தில் இருந்து தாயகம் செல்லும் பயணிகளுக்கு புதிய சலுகைகள் பொருந்தாது. அதன் விரிவான விபரங்கள் பின்வருமாறு:

குவைத் மற்றும் அமீரகம்( UAE) உள்ளிட்ட இரு நாடுகளைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசியை முடித்துவிட்டனர். அதுபோல் இந்த இரு நாடுகளிலும் கோவிட் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இருந்த போதும் ஏன் இந்த இரண்டு நாடுகளும் Green பட்டியலில் இடம்பெறவில்லை என்பது தெரியவில்லை. புதிய முடிவுகளின்படி வெளியிடப்பட்டுள்ள 87 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR பரிசோதனை தேவை என்ற நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இவர்களுக்கு நடைமுறையிலுள்ள 7 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பதிலாக 14 நாட்கள் சுய கண்காணிப்பு போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த 87 நாடுகளில் இருந்து வருகின்ற நபர்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை உங்களுடைய தடுப்பூசி சான்றிதழை Air-Suvidha தளத்தில் பதிவேற்றுவது. அதேநேரம் தடுப்பூசி எடுக்காத நபர்களுக்கு PCR பரிசோதனை சான்றிதழ் கண்டிப்பாக தேவை. மத்திய அரசு வெளியிட்டுள்ள Green பட்டியலில் வளைகுடா நாடுகளான பஹ்ரைன், கத்தார், ஓமன், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதேநேரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகியவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இந்த முடிவுக்கு இந்த இரு நாடுகளைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று பலர் கருதுகின்றனர். வரும் நாட்களில் திருத்தப்பட்ட புதிய பட்டியில் வெளியாகுமா....??? என்பது குவைத் மற்றும் அமீரக இந்தியர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

Add your comments to

Saturday, February 5, 2022

சாதனை பெண்மணி சரண்யா;குவைத் திரையரங்கில் வெளியான முதல் குறும்படம்-மபரூக்

குவைத்தில் சாதனை பெண்மணியாக வலம்வருகின்ற சரண்யா அவர்களின் மபரூக் குறும்படம் முதல் முறையாக திரையரங்கில் வெளியானது

Image : சாதனை பெண்மணி சரண்யா

சாதனை பெண்மணி சரண்யா;குவைத் திரையரங்கில் வெளியான முதல் குறும்படம்-மபரூக்

குவைத்தில் உள்ள ஓசோன் திரையரங்கில் மபரூக் குறும்படத்தின் பிரீமியர் ஷோ இன்று(05/02/2021) சனிக்கிழமை காலை 11:15 மணியளவில் திரையிடப்பட்டது. இந்த குறும்படம் இங்குள்ள தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட டி.கே.சரண்யா தேவி இயக்கத்தில், மகேஷ் செல்வராஜன் தயாரித்து, முஹம்மத் ரபீக் திரைக்கதை, ரதீஷ்.C.V அம்மாஸ் ஒளிப்பதிவு செய்து, ரம்பிரசாத் நாச்சிமுத்து இசையமைத்து தன்யா,அன்சீன், அம்ருதா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்த குறும்படத்தில் அம்ருதா அவர்களின் நடிப்பு உணர்வுபூர்வமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த குறும்படம் குழந்தை இல்லாத பெண்மணி ஒருவர் சமூகத்தில் சந்திக்கின்ற பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

Image : குறும்படம் பார்க்க வந்தவர்கள்

கோவிட் பாதுகாப்பு விதிமுறைகள் நிலுவையிலுள்ளதால் நெருக்கமான நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்கள் மட்டுமே பிரீமியர் ஷோவுக்காக அழைக்கப்பட்டனர். இந்த குறும்படத்தை பார்த்த அனைவரும் இவர்களின் இந்த சிறந்த படைப்பை பாராட்டினர். மேலும் சரண்யா தேவி அவர்கள் பல துறைகளில் சாதனைகள் செய்துள்ளார். குவைத்தில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் ஆவார், இதன் காரணமாக குவைத்திலுள்ள இந்தியர்கள் மத்தியில் பிரபலமானார் ஆவார். அதுபோல் ஆசிரியர் ஆகவும் தன்னுடைய சேவையை செய்து வருகிறார், RJ ஆகவும் தன்னுடைய முத்திரையை பதித்துள்ள பெண்மணி ஆவார். சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ள சரண்யா விஸ்மயா உள்ளிட்ட பல அமைப்புடன் இணைந்து தன்னாலான சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

Image credit: சரண்யா குறும்பட குழுவினர்களுடன்

இப்படிப்பட்ட பன்முகத்தை கொண்டவர் அவர் தற்போது இயக்குனராக தன்னுடைய புதிய முத்திரையை பதித்துள்ளார். குவைத் அளவில் நடைபெற்ற குறும்படங்களுக்கான போட்டியில் "மபரூக்" பல விருதுகளை பெற்றுள்ளது. இவருடைய இந்த பல சாதனைகளுக்கும் அவருடைய கணவரும் மற்றும் இந்த குறும்படத்தை தயாரித்தவருமான மகேஷ் செல்வராஜன அவர்கள் பக்கபலமாக இருந்து வருகிறார். அவருடைய இந்த சாதனை குவைத்திலுள்ள இந்தியர்களாக, அதிலும் குறிப்பாக தமிழர்களுக்காக நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம் ஆகும்.

Image credit:குறும்படம் திரையிடப்பட்ட அந்த நிமிடம்

Add your comments to

Tuesday, December 7, 2021

குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கு உரிமம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

குவைத்தில் ஓட்டுநர் உரிமம் கைவசம் வைக்க தகுதி இழந்தவர்களின் லைசன்ஸ் திரும்பபெற அதிகாரிகளுக்கு அறிவுத்தல்

Image : ஷேக் பைசல் அல்-நவாஃப் அல்-சபா

குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கு உரிமம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

குவைத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச சம்பள வரம்பு மற்றும் Profession(வேலை செய்கின்ற துறை) போன்ற நிபந்தனைகளுக்கு இணங்காத வெளிநாட்டவர்களின் ஓட்டுநர் உரிமைகளை திரும்பப் பெறுமாறு உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் ஷேக் பைசல் அல்-நவாஃப் அல்-சபா அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அமைச்சக வட்டாரங்களை மேற்கோள்காட்டி தினசரி பத்திரிகையொன்று இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி,முன்னர் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இணங்க ஓட்டுநர் உரிமம் பெற்று, தற்போதைய தொழில் துறையை மாற்றியது மற்றும் குறைந்த சம்பள வரம்பு போன்ற தகுதிகளை இழந்துள்ள நபர்களின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படும். உதாரணமாக, 600 தினார்களுக்கு மேல் சம்பளம் மற்றும் பல்கலைக்கழக பட்டம் பெற்ற கணக்காளர் தரவரிசையில் உள்ள ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் நபரின் தற்போதைய சம்பளம் எதோ ஒரு காரணத்தால் 600 தினார்களுக்கும் குறைவாக இருந்தால் அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். அதேபோல் முன்னர் ஓட்டுநர் பதவியில் உரிமம் பெற்று தற்போதும் சாதாரண தொழிலாளர்களாக மாறியவர்களின் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்.

மேலும் செல்லுபடியாகும் பழைய ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் அனைவரையும் புதிய ஸ்மார்ட் லைசென்ஸ்க்கு மாற்ற வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அறிவுத்தல் செய்துள்ளது. இதற்கான கடைசி காலக்கெடுவை விரைவில் அமைச்சகம் நிர்ணயிக்கும். புதிய ஸ்மார்ட் லைசென்ஸ்க்கு மாற்றி வழங்குகின்ற நேரத்தில் உரிமம் பெற்றவர்களின குறைந்தபட்ச சம்பள வரம்பு, செய்கின்ற பணியின் தகுதிகள் உள்ளிட்டவை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் அமைச்சகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதன் ஒரு பகுதியாக, உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் ஷேக் பைசல் அல் நவாப் நேற்று மூத்த அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார் முன்னதாக, 2013 ஆம் ஆண்டுக்கு முன் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் மற்றும் தொழில் நிபந்தனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்தப் புதிய முடிவு இந்தப் பிரிவில் உள்ளவர்களுக்குப் பொருந்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Add your comments to