BREAKING NEWS
latest

Tuesday, September 17, 2024

பயோமெட்ரிக் கைரேகை செயல் முறைகளை முடித்து முன்னுதாரணம் காட்டிய குவைத் அமீர் மற்றும் அரச குடும்பத்தினர்

முன்னுதாரணம் காட்டிய குவைத் அமீர் மற்றும் அரச குடும்பத்தினர் பயோமெட்ரிக் கைரேகை செயல் முறைகளை முடித்தனர் நாட்டின் சட்டங்களுக்கு அனைவரும் சமமே

Image : அமீர், இளவரசர் மற்றும் பிரதமர்

பயோமெட்ரிக் கைரேகை செயல் முறைகளை முடித்து முன்னுதாரணம் காட்டிய குவைத் அமீர் மற்றும் அரச குடும்பத்தினர்

குவைத் நாட்டின் சட்டங்கள் மற்றும் இறையாண்மை மேல் யாரும் பெரியவர்கள் இல்லை என்ற செய்தி ஒருமுறை கூட அமீர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா நாட்டு மக்களுக்கு காட்டும் விதமாக நாட்டின் அனைத்து குடிமக்களும் பயோமெட்ரிக் செயல்முறையை முடிக்க வேண்டும் என்று சட்டத்தின்படி இன்று பயான் அரண்மனையில் துணைப் பிரதமர், பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர் ஷேக் ஃபஹத் அல் யூசுப் மற்றும் அங்கிருந்த அதிகாரிகள் முன்னிலையில் பயோமெட்ரிக் கைரேகை செயல்முறையை முடித்தார்.

இதேபோல் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா காலித் அல்-ஹமத் அல்-சபா அவர்களும் மற்றும் நாட்டின் பிரதமர் ஷேக் அஹ்மத் அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபா அவர்களும் பயோமெட்ரிக் கைரேகை செயல் முறைகளை பயான் அரண்மனையில் வைத்து முடித்தனர்.

மேலும் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இம்மாதம் 30ம் தேதிக்குள் பயோமெட்ரிக் நடைமுறைகளை முடிக்கவும் மற்றும் டிசம்பர் 31ம் தேதிக்குள் நாட்டில் வசிக்கின்ற வெளிநாட்டினர் அனைவரும் பயோமெட்ரிக் நடைமுறைகளை முடிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடதக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait King | Kuwait Update

Add your comments to

Monday, September 16, 2024

குவைத்தில் தொழிலாளி பெயின்ட் தின்னர் குடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

குவைத்தில் தின்னர் குடித்த வெளிநாட்டவரான தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜஹ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

Image: Kuwait Police

குவைத்தில் தொழிலாளி பெயின்ட் தின்னர் குடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

குவைத்தின் ஜஹ்ரா மருத்துவமனையில் தற்செயலாக பெயின்ட் தின்னரை குடித்ததாக வெளிநாட்டவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வெளிநாட்டவர் மிகவும் ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் இருந்ததால் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்று மருத்துவமனையிலிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருடன் வந்த வெளிநாட்டவரான நபர் கூற்றுப்படி இந்த சம்பவம் குவைத்தின் முட்டலா குடியிருப்பு பகுதி, N7, பிளாக் 3-இல் நடந்ததாக கூறினார். இது தற்செயலாக நடந்ததா இல்லை தற்கொலை முயற்சியா உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகின்றன. ஆனால் தொழிலாளி எந்த நாட்டவர் என்ற கூடுதல் விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்த சம்பவம் நபிதின விடுமுறை நாளான நேற்று(15/09/24) ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Moh | Kuwait Health | Kuwait Hospital

Add your comments to

Saturday, September 14, 2024

குவைத்தின் முன்னாள் பிரதமரும்,ஆளும் அரசர் குடும்பத்தின் முக்கிய உறுப்பினருமான ஷேக் ஜாபர் முபாரக் அல் ஹமத் அல் முபாரக் அல் சபா இன்று காலமானார்

குவைத்தின் முன்னாள் பிரதமரும்,அரசர் குடும்பத்தினருமான ஷேக் ஜாபர் அல்-முபாரக் இன்று காலமானார்

Image : மறைந்த ஷேக் ஜாபர் அல்-முபாரக்

குவைத்தின் முன்னாள் பிரதமரும்,ஆளும் அரசர் குடும்பத்தின் முக்கிய உறுப்பினருமான ஷேக் ஜாபர் முபாரக் அல் ஹமத் அல் முபாரக் அல் சபா இன்று காலமானார்

குவைத்தின் முன்னாள் பிரதமரும், ஆளும் அரசர் குடும்பத்தின் முக்கிய உறுப்பினருமான ஷேக் ஜாபர் முபாரக் அல் ஹமத் அல் முபாரக் அல் சபா இன்று(14/09/2024) சனிக்கிழமை தன்னுடைய 82-வது வயதில் காலமானார். கடந்த நவம்பர்-28,2011 முதல் 2019 வரை 8 ஆண்டுகள் குவைத்தின் பிரதமராக இருந்த அவர், ஜனவரி-4,1942 இல் பிறந்தார்.

1968 முதல் அமிரி திவானில் நிர்வாக மற்றும் நிதி விவகாரங்களின் கண்காணிப்பாளர் நிர்வாக இயக்குனர் பதவிகள் வகித்த அவர். மார்ச் 1979 இல் நாட்டின் Hawally ஆளுநராக நியமிக்கப்பட்டார், தொடர்ந்து Ahamdi அஹ்மதி ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் சமூக விவகாரங்கள், தொழிலாளர் துறை அமைச்சகம், செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.

பிப்ரவரி-14,2001அன்று ஷேக் ஜாபர் அல்-முபாரக் துணைப் பிரதமரும்,பாதுகாப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். பிப்ரவரி-9,2006 அன்று முதல் துணை முதல்வராக பொறுப்பேற்றார். அத்துடன் உள்துறை, பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளையும் கவனித்து வந்தார். 2019ல் பிரதமர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait King | Death Update

Add your comments to

செப்டம்பர்-1,2024 முதல் தொடங்கிய பொதுமன்னிப்ப வருகின்ற அக்டோபர்-31,2024 வரையில் தொடரும்

துபாய் Al Awir பொதுமன்னிப்பு மையம் மற்றும் அமர் மையங்கள் நபி தின தினத்தன்று இயங்காது

Image : பொதுமன்னிப்பு மையம்

செப்டம்பர்-1,2024 முதல் தொடங்கிய பொதுமன்னிப்ப வருகின்ற அக்டோபர்-31,2024 வரையில் தொடரும்

துபாய் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் அபராதம் இன்றி ஆவணங்களை சரி செய்து தொடர்ந்து நாட்டில் தங்கவும் அல்லது எந்த பயணத்தடையும் இன்றி தங்களுடைய நாடுகளுக்கு திரும்பி சென்று, மீண்டும் அமீரகம் திரும்பும் வகையில் பொதுமன்னிப்பு செப்டம்பர்-1,2024 முதல் தொடங்கியது. இது வருகின்ற அக்டோபர்-31,2024 வரையில் தொடரும். இதற்கிடையே தற்போது வரையில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் இந்த பொதுமன்னிப்பை பயன்படுத்தி பலன் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் துபாய் Al Awir பொதுமன்னிப்பு மையம் மற்றும் அமர் மையங்கள் நபி தினத்தை நாளை(15/09/24) ஞாயிற்றுக்கிழமை இயங்காது என்று துபாய் குடிவரவு துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாளை மறுநாள் திங்கட்கிழமை(16/09/2024) முதல் வழக்கம்போல் மையங்கள் தங்களுடைய சேவைகளை வழங்கும். இந்திய மொழிகள் உட்பட பல மொழிகளில் இதற்கான அறிவிப்பை அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ளனர்.

அதேபோல் சனி முதல் வியாழன் வரை காலை 08:00 முதல் இரவு 08:00 மணி வரையில் Al Awir மையங்கள் சேவை வழங்கி வருகின்றன. அதேநேரம் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12:00 முதல் மாலை 04:00 மணிவரையில் சேவை வழங்கப்படாது. துபாயில் உள்ள 86 அமர் மையங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காலஅட்டவணை அடிப்படையில் இயங்கும் என்றும் அதிகாரிகள் விளக்கினர்.

இதற்கிடையே சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் உங்கள்ளுக்கு அமீரகத்தின் எந்த எமிரேட்டில் விசா வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து விசா Issue செய்த எமிரேட்டில் பொதுமன்னிப்புக்காக விண்ணப்பிக்க வேண்டும். அபராதம் இன்றி தாயகம் திரும்ப அனுமதி கிடைத்த நபர்கள், 14 நாட்களுக்குள் அமீரகத்தை விட்டு வெளியேற வேண்டும். அதேநேரம் செப்டம்பர்-1,2024 க்கு பிறகுள்ள ஏற்பட்டுள்ள விசா விதிமீறல்கள் பொதுமன்னிப்பு வரம்புக்குள் வராது எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Uae Amnesty | Illegal Immigrant | Uae Worker

Add your comments to

சவுதியில் ஒரு கம்பெனி வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது

புதிய தீர்மானம் ஊழியர்களுக்கு புத்துணர்வு வழங்குவதுடன் கம்பெனியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்

Image : கம்பெனி ஊழியர்களில் சிலர்

சவுதியில் ஒரு கம்பெனி வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது:

சவுதியின் ரியாத்தை தளமாகக் கொண்ட முன்னணி AI வாடிக்கையாளர் அனுபவ மேலாண்மை தளமான லூசிடியா, தனது பணி அட்டவணையில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது, சவுதி அரேபியாவில் வாரத்தில் நான்கு நாள் வேலை என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தும் முதல் நிறுவனமாக இது மாறியுள்ளது.

இந்த அறிவிப்பு சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறி பல்வேறுபட்ட விவாதங்களுக்கு வழி வகுத்துள்ளது. வரும் தினத்தில் மற்ற பல கம்பெனிகளும் இதே முடிவுக்கு வருமா என்று பல ஊழியர்களும் எதிர்பார்த்து இருக்கின்றனர். சாதாரண முறையில் சவுதியில் 5 அல்லது 6 நாட்கள் வாரத்தில் பெரும்பாலான சவுதி கம்பெனியில் வேலை தினங்களாக உள்ளது.

புதிய தீர்மானம் ஊழியர்களுக்கு புத்துணர்வு வழங்குவதுடன் கம்பெனியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் நம்புவதாக நாட்டின் பிரபலமான மனித உரிமை ஆராய்ச்சி நிபுணர் கலீல் அல் தியாபி கருத்து தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to

Thursday, September 12, 2024

குவைத்தில் விசா மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது

குவைத்தில் 20ம் நம்பர் விசா 18ம் நம்பருக்கு மாற்ற வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததாக அதிகாரிகள் அறிவிப்பு

Image : குவைத் வேலை வாய்ப்பு மைய‌ம்

குவைத்தில் விசா மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது

குவைத்தில் வீட்டுப் பணியாளர்கள்(Article-20) தங்களுடைய விசாவை தனியார்(Article-18) துறைக்கு மாற்றுவது தொடர்பான 2024 ஆம் ஆண்டின் அமைச்சரவை தீர்மானம் எண்-6 இன்று(12/09/2024) வியாழக்கிழமையும் காலாவதியாகிறது என்று மனிதவளத்திற்கான பொது அதிகாரசபை அதிகாரிகள் அறிவித்தனர்.

இதற்கான கால அவகாசம் கடந்த ஜூலை 14ம் தேதி முதல் இம்மாதம் 12-ம் தேதி(அதாவது இன்று வரையில்) ஒதுக்கப்பட்டு இருந்தது. மேலும் அனுமதிக்கப்பட்ட இந்த கால அவகாசத்தை இரண்டு மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று பல முதலாளிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் தற்போது வரையில் விசா மாற்றம் பெற விண்ணப்பம் அளித்தவர்களின் பரிவர்த்தனைகள்(மனுக்கள்) பரிசீலனை செய்யப்படும் எனவும், ஏற்கனவே சுமார் ஐம்பதாயிரம் பேர் இந்த அறிவிப்பு மூலம் விசா மாற்றம் செய்து பயனடைந்துள்ளனர் எனவும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Job Visa | Visit Visa

Add your comments to

Wednesday, September 11, 2024

3 இந்தியர்கள் உட்பட 6 பேர் வேலை செய்கின்ற ஈரானிய நாட்டுக்கு சொந்தமான கப்பல் குவைத் எல்லையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது

குவைத் கடல் எல்லையில் கப்பல் கவிழ்ந்த விபத்தில் இந்தியர்கள் உட்பட 6 பேரை காணவில்லை

Image : விபத்தில் சிக்கிய அமல்

3 இந்தியர்கள் உட்பட 6 பேர் வேலை செய்கின்ற ஈரானிய நாட்டுக்கு சொந்தமான கப்பல் குவைத் எல்லையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது

குவைத் கடல் எல்லையில் Ara Bakhtar-1 என்ற ஈரானிய வர்த்தக எண்ணெய் கப்பல் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் கப்பலில் இருந்த 3 இந்தியர்கள் உட்பட 6 பேர் காணாமல் போன நிலையில் 3 பேர் உடலை குவைத் கடலோர காவல்படை வீரர்கள் மீட்ட நிலையில், மீதமுள்ள 3 பேரை கடலோர காவல்படை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 இந்தியர்கள் உட்பட 6 பேர் வேலை செய்கின்ற ஈரானிய நாட்டுக்கு சொந்தமான கப்பல் குவைத் எல்லையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. காணாம‌ல் போன 3 பேரில் ஒருவரான இந்தியா, கேரளா மாநிலம் கண்ணூரை அடுத்த ஆலக்கோடு பகுதியை சேர்ந்த அமல் என்ற கப்பல் ஊழியரையும் காணவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கிய மற்ற 3 பேர் ஈரானிய நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான கூடுதல் விபரங்கள் எதுவும் உடனடியாக தெரியவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to

Tuesday, September 10, 2024

குவைத்தில் இரண்டு பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் விசா புதுப்பித்தல் செய்வது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது

குவைத்தில் சஹால் செயலி மூலம் குடும்ப மற்றும் வீட்டு வேலை விசாக்களை தற்காலிக புதுப்பித்தல் செய்யலாம்:

Image credit: MOI OFFICIAL

குவைத்தில் இரண்டு பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் விசா புதுப்பித்தல் செய்வது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது

குவைத்தில் சஹால் ஆப் மூலம் குடும்ப(Article-22) மற்றும் வீட்டு வேலை விசாக்களின்(Article-20) தற்காலிக புதுப்பித்தல் சேவை தொடங்கப்பட்டது.

இதற்காக குவைத் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று Residency சேவை பிரிவை தேர்வு செய்வதன் மூலம் இந்த வசதியை பெறும் வகையில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் விசா புதுப்பித்தல் மையத்திற்கு நேரடியாக வராமலேயே ஆன்லைன் வழியாகவே தற்காலிக புதுப்பித்தல் செய்ய முடியும்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Sahel App | Kuwait Moi | New Features

Add your comments to

Saturday, September 7, 2024

குவைத் மருத்துவமனைகளில் இனிமுதல் பார்கிங் அனுமதி 48 மணிநேரம் மட்டுமே

குவைத் மருத்துவமனைகளில் இனிமுதல் பார்கிங் அனுமதி 48 மணிநேரம் மட்டுமே என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது

Image : Kuwait Hospital

குவைத் மருத்துவமனைகளில் இனிமுதல் பார்கிங் அனுமதி 48 மணிநேரம் மட்டுமே

குவைத் சுகாதாரத்துறையின் புதிய முடிவுப்படி இனிமுதல் நாட்டில் உள்ள மருத்தவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வருகின்ற ஒருவர் தன்னுடைய வாகனத்தை அதிகபட்சமாக 48 மணிநேரம் மட்டுமே மருத்துவமனை வாளாக பார்கிங் இடங்களில் இனிமுதல் தன்னுடைய வாகனத்தை நிறுத்த முடியும்.

48 மணிநேரத்திற்கு மேல் வாகனத்தை நிறுத்தினால் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். இந்த புதிய முடிவு மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிக‌ள், நோயாளிக‌ளை பார்க்க வருகின்ற நபர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்த தேவையான இடத்தை உறுதி செய்யும் திட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிலர் பல மாதங்களாக தன்னுடைய வாகனங்களை இப்படிப்பட்ட இடங்களை நிறுத்தி வைத்திருப்பதையும் அதிகாரிகள் கண்டித்துள்ளனர். எனவே இனிமுதல் எச்சரிக்கையாக இருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Hospital | New Rule | Kuwait Parking

Add your comments to

Tuesday, June 18, 2024

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சராசரியாக 13,500,00 அளவுக்கு நிதி உதவி கிடைக்கும்

மங்காப் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் கும்பத்தினருக்கு 15000 டாலர்கள் இழப்பீடு என்ற செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த இந்தியர்கள்

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சராசரியாக 13,500,00 அளவுக்கு நிதி உதவி கிடைக்கும்

குவைத்தின் மங்காப் பகுதியில் 7 தமிழர்கள், 25 மலையாளிகள் என்று மொத்தமாக 49 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஆவார்கள். இந்த தீ விபத்து சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியாக பதினைந்தாயிரம் டாலர்கள்(சுமார் 5000 தினார்கள்) குவைத் அரசு வழங்க முடிவு செய்துள்ளதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி குவைத் அரபு நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் மூலம் இந்தத் தொகை விநியோகிக்கப்படும். இந்திய ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கு சராசரியாக 13,500,00 அளவுக்கு நிதி உதவி கிடைக்கும். அதேபோல் உயிரிழந்த தொழிலாளர்கள் வேலை செய்த NTPC நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.ஜி ஆபிரகாம் அவர்கள் கடந்த தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 8 லட்சமும், 4 ஆண்டு சம்பளத்துக்கு இணையான தொகையை காப்பீடு பணமாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இதை தவிர தமிழக அரசு சார்பில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு 5 லட்சம் இழப்பீடாக வழங்கபடும் என்று அறிவிக்கப்பட்டு, உடல்கள் ஒப்படைக்கப்பட்ட நேரத்தில் அதற்கான காசோலை குடும்பத்திடமும் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மத்திய அரசு சார்பில் 2 லட்சமும் அறிவிக்கப்பட்டது.கேரளா அரசும் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தால 5 லட்சம் இழப்பீடாக அறிவித்தது குறிப்பிடதக்கது. இதை தவிர உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கு தொழில் அதிபர் யூசுப் அலி 3 லட்சமும், ரவி பிள்ளை 2 லட்சமும் அறிவித்து உள்ளனர்.

மங்காப் தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அமீர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்கள் அந்த நேரத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆனால் எவ்வளவு தொகை என்பது அந்த நேரத்தில் வெளியிடப்படவில்லை. இந்த பயங்கரமான தீ விபத்தில் 7 தமிழர்கள், 25 மலையாளிகள் உட்பட 45 இந்தியர்களும், 3 பிலிப்பைன்ஸ் நாட்டினரும் உட்பட மொத்தமாக 49 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவரின் உடலை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to